.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

ஆறடியை வீழ்த்தும் அரையடி.

| | 5 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்



58: நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாததைக்கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டார்கள்.
அல் குர்ஆன்:  22 பாகம் :   33. அல் அஹ்ஸாப்

குற்றங்குறைகள் கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு கேடுதான்.யார் ஒருவர் தன்னைசார்ந்த மற்றும் தன்னைச்சாராத தன் சகோதரனை தரைக்குறைவாக எண்ணுகிறானோ அல்லது பேசுகிறானோ அவன்
இறைவனின் கோபத்திற்கு ஆளாகநேரிடும்.

எந்த ஒரு மனிதர்மேலும் அநியாயமாக, அவதூறாக, இட்டுக்கட்டி பேசாதீர்கள். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யூகத்தில் குற்றம் சுமத்தாதீர்கள். நாளை இதே நிலைக்கு நீங்களும் தள்ளப்படலாம். எந்த ஓர் செயலும் நம்மிடமிருந்து புறப்படுவதுதான் நமக்கே திருப்பவரும் அதற்கு நேரம்காலம் கிடையாது எந்த ரூபத்திலும் வரும்.

ருவர் தவறிழைத்துவிட்டால் அவரை தனிமையில் கண்டியுங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள் அதைவிடுத்து
அடுத்தவர் அறிவதுபோல் அவருடைய செயல்களை இடித்துரைக்காதீர்கள் அதையே குத்திக்காட்டாதீர்கள். ஒருவருக்கு இருக்கும் திறமைகள்போல் மற்றவருக்கு இருப்பதில்லை அதற்காக அவர்கள் எதற்குமே லாயக்கில்லாவர்கள் என்று சொல்லாதீர்கள் அதைவிட சிறப்பானவைகள் அவர்களிடமிருக்கும்..

அரையடி நாக்கு ஆறடி மனிதரையும் வீழ்த்திவிடும்
எலும்பில்லாநாக்கு எதையும் எடுத்தெறிந்து பேசத்துணியும்
அதை அடக்கியே வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டியது
நம்மிடதான் இருக்கிறது..

பொல்லாத தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக ஆமீன்..

இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..