.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

மரண அறிவிப்பு.

| |

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.

சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவின் தந்தை  இன்று காலை மரணமடைந்து விட்டார்கள் . [இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.]

உடல் நலம் சரியிலாமல் இருந்து  காலில் ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து நேற்றைய முன்தினம்தான் வீட்டுக்கு டிச்சார்ஜ் ஆகிபோனவர்கள் இன்று இறந்துவிட்டார்கள்.. அவர்களின் இழப்பு அக்குடும்பத்திற்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் அவர்கள் மனமிருக்கும். ஆனாலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்கத்தானே பூமிக்கு வந்துள்ளோம். இதிலிருந்துமட்டும்  யாரும் தப்பிக்கமுடியாது..மண்ணிற்கு வரும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் மண்ணிற்கு போவது உறுதி இது மான்புடையோன் வகுத்த நியதி.. 

ஜலீலாக்காவின் தந்தைக்காக அவர்களின் மறுமை வாழ்வுக்காவும் . அவர்களின் குடும்பத்தின் மனநிம்மதிக்காவும்அனைவரும் துஆச்செய்யுங்கள். 

யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த  பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக!  இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு  நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.

ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப]  வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம்   நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்..
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

8 comments:

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

அன்னாரின் பாவங்களை மன்னித்து,அவர்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வானாக!

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களின் எல்லாப் பாவங்களையும் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக.

Geetha6 said...

மிகவும் வருத்தமாக உள்ளது.அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை கூறுங்கள் !

ஸாதிகா said...

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்கின்றேன்.இறைவன் அவர்களின் குடும்பத்தாருக்கு நற்பொருமையைக்கொடுப்பானாக.

rajamelaiyur said...

அவர் ஆத்துமா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்

எல் கே said...

எனது இரங்கல்கள் . அவரது இழப்பை தாங்கும் மனத்திடனை அவரது குடும்பத்திற்கு இறைவன் அருள்வானாக

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை பொருந்திக்கொள்வானாக., அவர்களின் கப்ரு வாழ்வு வெளிச்சம் நிறைந்ததும் வேதனை நீங்கியதுமாக இருக்க செய்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தவுஸை அவர்களுக்கு வழங்கி அல்லாஹ் அருள் புரிவானாக..!

அன்புடன் மலிக்கா said...

வ அலைக்குமுஸ்ஸலாம்..

தங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்..

வருகைதந்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும்
இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்..

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..