.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

வசந்த காலத்தின் வாயிற்படி!

| | 4 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்!

நாம் நோன்பை நல்லமுறையில் கடைப்பிடித்தோமேயானால் அதன் கூலியை இம்மையிலும் மறுமையில் இறைவன் நமக்கு அளவில்லாமல் அள்ளித்தருவான்.
ஒவ்வொரு மனிதனும் வருடந்தோரும் அலுக்காமல் சலைக்காமல்,
 3 வேளையென்ன முடிந்தால் 6 வேளைகூட சாப்பிடக் கிடைத்தால் சாப்பிடுவான். சாப்பிடுகிறான்.

எதையுமே ஓர் வரையரை படுத்துவதில் இறைவனுக்கு நிகர் இறைவன் மட்டுமே! அதனால்தான் வருடத்தில் ஒருமாதமாவது தன்னை. தன் நாவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் தன் உள்ளத்தில் உண்டாகும் தீமைகளுக்கும் சேர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டி இன்நோன்பை ஏற்படுத்தி அவனை தூய்மைப்படுத்துகிறான்.

ஆகவே நோன்பு காலங்களில் நோன்பை மிகவும் கண்ணியத்தோடும். கடமையுணர்ச்சியோடும் கடைப்பிடியுங்கள். அதற்கான கூலையை இறைவன் ஈருலகிலும் வழங்குவான் இதில் சிறிதும் ஐயமில்லை.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உடல்ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தந்து அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக ஆமீன்.

கீழே படிக்கவிருக்கும் இந்த கட்டுரை எனக்கு மெயில் வந்தது படித்து பயன் பெறுங்கள்.

நோன்பு வசந்த காலத்தின் வாயிற்படி!


-டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம்.

ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை.

அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்.
ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான்.

அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு.

பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது.

இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது.

வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது.
அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும்.

பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும்.
வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும்.

வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்
தலைவலி :கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள்: தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை காப்பாற்றி சுவர்கத்தின் நறுமணத்தையும் அதனுள்ள என்றென்றும் தங்கியிருக்கும் நற்பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! ஆமீன்.

அன்புடன் மலிக்கா



இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே13 [சிறப்புமிகுந்த மாதம்]

| | 6 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகி இறைவனின் திருப்பெயரால்.


அன்புள்ள ஆன்மாவே!
இந்த அருமையான மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு
நன்மையின்பக்கம் செல்லவே முனையுங்கள்.
தங்களால் இயன்ற அளவு குர்ஆனை ஓதுங்கள்.
ஜக்காத்தை கொடுக்கங்கள்.
இரவிலும் பகலிலும்  இறைவனை இடைவிடாது வணங்குங்கள்
நன்மையை ஒன்றுக்கு பத்தாக. நூறாக. இறைவனிடம் பெறுங்கள்.

நம் இறைவன் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். பாவத்தின் பக்கம் நெருங்காதீகள்.கண்ணியமிக்க இந்தமாதத்தின் பொருட்டால் நம் அனைவருக்கும் இறைவன் சுவர்க்கத்தை வழங்கி நம்மை நரகத்திலிருந்து பாதுக்காப்பானாக!

கீழேவரும் இந்த பகுதி எனக்கு மெயிலில் வந்தது.
 நான் அறிந்துகொண்டதை அனைவருக்கும் அறியத் தந்திருக்கிறேன்

குர்ஆன் அருள‌ப்ப‌ட்ட‌ மாத‌ம்:


ர‌ம‌ளான் மாத‌ம் எத்த‌கைய‌தென்றால் அதில் தான் ம‌னித‌ர்க‌ளுக்கு நேர்வ‌ழி காட்டியாக‌வும், இன்னும் நேர்வ‌ழியிலிருந்தும் (ச‌த்திய‌த்தையும் அச‌த்திய‌த்தையும்) பிரித்த‌றிவிக்க‌க் கூடிய‌திலிருந்தும் தெளிவான‌ விள‌க்க‌மாக‌வும் உள்ள‌ குர்ஆன் இற‌க்கிய‌ருள‌ப்ப‌ட்ட‌து; என‌வே எவ‌ர் உங்க‌ளில் அம்மாத‌த்தை அடைகிறாரோ அவ‌ர் அதில் நோன்பு நோற்க‌வும். குர் ஆன் (2;185)


குர்ஆன் ஓத‌வும் அத‌ன் பொருள் விள‌ங்கி ஆராய்ந்து பார்க்க‌வும் இறைவ‌ன் ம‌னித‌ ச‌முதாய‌த்திற்கு க‌ட்ட‌ளையிட்டுள்ளான். இத‌ன் மூல‌ம் ம‌னித‌னின் அறியாமை எனும் இருள் நீங்கி ச‌த்திய‌ம், நேர்வ‌ழி என்ற‌ ஒளியை பெற்றுக் கொள்கின்றான்.மேலும் குர்ஆனை யார் க‌ண்டு கொள்ள‌வில்லையோ,அவ‌ர்க‌ளைப் ப‌ற்றியும் இறைவ‌ன் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றான்
உங்க‌ள் இறைவ‌னிட‌மிருந்து (ச‌த்திய‌த்திற்குறிய‌) ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் உங்க‌ளிட‌ம் வ‌ந்திருக்கின்ற‌ன‌. எவ‌ன் (அவ‌ற்றைக் க‌வ‌னித்துப்) பார்க்கின்றானோ (அது) அவ‌னுக்கே ந‌ன்று. எவ‌ன் (அவ‌ற்றைப் பார்க்காது) க‌ண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவ‌னுக்கே கேடாகும். (ந‌பியே! நீங்க‌ள் அவ‌ர்க‌ளை நோக்கி) "நான் உங்க‌ளைப் பாதுகாப்ப‌வ‌ன் அல்ல‌" (என்று கூறுங்க‌ள்). குர்ஆன் (6;104)
குர்ஆனின் ஞான‌ம் ஒவ்வொரு த‌னி ம‌னித‌னின் உள்ள‌த்திலும் இருக்க‌ வேண்டும். அப்ப‌டி இல்லாத‌ உள்ள‌த்தை பாழ‌டைந்த‌ வீட்டிற்கு ஒப்பிட்டு ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறியுள்ளார்க‌ள்.
ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்ற‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்:"குர்ஆனிலிருந்து சிறிதள‌வு கூட‌ த‌ம் உள்ள‌த்தில் ம‌ன‌ன‌ம் இல்லாத‌வ‌ர் பாழ‌டைந்த‌ வீடு போன்ற‌வ‌ராவார். (திர்மிதி)

மேலும் ர‌ம‌ழான் மாத‌த்தில் திருக்குர்ஆனை அதிக‌ம் ஓத‌வும், தான‌ த‌ர்ம‌ங்க‌ளை அதிக‌ப்ப‌டுத்த‌வும் அண்ண‌ல் நபி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஆர்வ‌மூட்டியுள்ளார்க‌ள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளில் அதிகமாக‌க் கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ளைச் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் மிக‌ அதிக‌மாக‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ர‌ம‌ழானில் ஒவ்வொரு இர‌விலும் நாய‌க‌த்தைச் ச‌ந்திப்பார்க‌ள், குர்ஆனை அவ‌ர்க‌ளுக்கு ஓதிக்காண்பிப்பார்க‌ள். ஜிப்ரீல் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் வேக‌மாக‌ வீசும் காற்றை விட‌ அதிக‌மாகக்‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். (புகாரி_முஸ்லிம்)

முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்
வ‌ஹி(இறைச்செய்தி)யின் துவ‌க்க‌ம்:
ம‌க‌த்துவ‌மிக்க‌ இந்த‌ மாதத்திலே தான் ம‌னித‌குல‌ம் பெருமையடையும் வ‌கையில் பல‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் நிக‌ழ்ந்த‌ன‌. வ‌ழிகேட்டிலிருந்து நேர்வ‌ழிக்கும், இருளிலிருந்து பேரொளிக்கும், இறைநிராக‌ரிப்பிலிருந்து ஈமானுக்கும் ம‌னித‌ ச‌முதாய‌த்தை திருப்பி இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் அவ‌ர்க‌ள் ஈடேற்ற‌ம் பெற‌க்கார‌ண‌மான‌ வ‌ஹியின் துவ‌க்க‌ம் புனித‌ ர‌ம‌ழானில் தான் ஆர‌ம்ப‌மான‌து.
புனித‌ ர‌ம‌ழான் மாத‌த்தில் ம‌க்காவிலுள்ள‌ ஹிரா குகையில் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ச‌ந்தித்து இறைவ‌ன் அருளிய‌ திருக்குர்ஆனின்.....

1.(ந‌பியே!) உம்முடைய‌ ர‌ப்பின் திருப்பெய‌ரைக் கொண்டு
ஓதுவீராக‌! அவ‌ன் எத்த‌கைய‌வ‌னென்றால் . (அனைத்தையும்) ப‌டைத்த‌வ‌ன்.

2. ம‌னித‌ர்க‌ளை இர‌த்த‌க்க‌ட்டியிலிருந்து அவ‌ன் தான். ப‌டைத்தான்.

3. ஓதுவீராக‌! உம்முடைய‌ ர‌ப்பு மிக்க‌ த‌யாள‌மான‌வ‌ன்.

4. அவ‌னே எழுதுகோலைக் கொண்டு க‌ற்றுக்கொடுத்தான்.

5. ம‌னித‌னுக்கு அவ‌ன் அறியாத‌வ‌ற்றை(யெல்லாம்) அவ‌ன் . க‌ற்றுக்கொடுத்தான். குர்ஆன்(96;1 முத‌ல் 5)

என்ற‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதிக்காட்டினார்க‌ள். இத‌ற்குபின் இஸ்லா‌த்தின் ஏக‌த்துவ‌ப் பிர‌ச்சார‌ அழைப்பு ஆர‌ம்ப‌மான‌து. இந்நிக‌ழ்வு ந‌பித்துவ‌த்தின் முத‌லாம் ஆண்டு ர‌ம‌ழான்_17 அன்று (ஹிஜ்ர‌த்திற்கு 13 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், கி.பி.610 ஜூலை இல்) நிக‌ழ்ந்த‌து.

லைல‌த்துல் க‌த்ரு:
இம்மாத‌த்தில் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் தான் புனித‌ குர்ஆன் லவ்ஹுல் ம‌ஹ்ஃபூலிலிருந்து முத‌ல் வான‌த்திற்கு மொத்த‌மாக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து. பின் கால‌ச் சூழ்நிலைக‌ளுக்கு ஏற்ப‌ இருப‌த்து மூன்று வ‌ருட‌ங்க‌ளில் சிறிது சிறிதாக‌,முத‌ல் வான‌த்திலிருந்து ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளுக்கு ஜிப்ரீல்(அலை) மூல‌ம் அருள‌ப்ப‌ட்ட‌து.

"(லைல‌த்துல் க‌த்ரு என்னும்) க‌ண்ணிய‌மிக்க‌ இர‌வு ஆயிர‌ம் மாத‌ங்க‌ளை விட‌ மிக‌ச் சிற‌ந்த‌து" குர்ஆன் (97;3)

ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்றதாக‌ ஹ‌ஜ்ர‌த் அபூஹுரைரா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: யார் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் ஈமானுட‌ன் ந‌ற்கூலியை ஆத‌ர‌வு வைத்த‌வ‌ராக‌ நின்று வ‌ண‌ங்குகிறாரோ அவ‌ரின் முன் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌டும். (புகாரி, முஸ்லிம்)

க‌தீஜா(ர‌ழி)அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத்:
அன்னை க‌தீஜா(ர‌ழி) அவ‌ர்க‌ள், ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் ஏக‌த்துவ‌ அழைப்பை முத‌ன் முத‌லாக‌ ஏற்று ஈமான் கொண்டவ‌ர்க‌ளில் பெண்க‌ளில் முத‌லாம‌வ‌ர் ஆவார்க‌ள். அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத் ந‌பித்துவ‌த்தின் ப‌த்தாம் ஆண்டு (ஹிஜ்ர‌த்திற்கு மூன்று ஆண்டுக‌ளுக்கு முன்) ர‌ம‌ழான் மாத‌த்தில் நிக‌ழ்ந்த‌து.

ப‌த்ரு யுத்த‌ம்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ர‌மழான் பிறை 17 வெள்ளிக் கிழ‌மை ப‌த்ரு யுத்த‌ம் நிக‌ழ்ந்த‌து. இந்த‌ யுத்த‌தில் சிறிய‌ ப‌டையின‌ராக‌ இருந்த‌ முஸ்லிம்க‌ளுக்கு அல்லாஹ் உத‌வி செய்து வெற்றி பெற‌ச் செய்தான்.

"நீங்க‌ள் அல்ல‌ஹ்வைக் கொண்டும்,(ச‌த்திய‌த்திற்கும், அச‌த்திய‌த்திற்குமிடையே) தீர்ப்ப‌ளித்த‌ (ப‌த்ரு போரின்) நாளில்_ இரு ப‌டையின‌ர் ச‌ந்தித்துக் கொண்ட‌ நாளில்_ நம் அடியாரின் மீது நாம் இறக்கி வைத்த‌ (உத‌வி முத‌லிய‌)வ‌ற்றைக்கொண்டும் நீங்க‌ள் ஈமான் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால்(இத‌னை அறிந்து கொள்ளுங்க‌ள்); அல்லாஹ் எல்லாப் பொருட்க‌ளின் மீதும் ச‌க்தியுள்ள‌வ‌ன். (8;41)

ஜ‌காத்துல் ஃபித்ரு
ஜ‌காத்துல் ஃபித்ரு (ஸ‌த‌கத்துல் ஃபித்ரு) க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்ட‌தும், பெருநாள் தொழுகை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு ர‌ம‌ழானிலிருந்து தான்.

ம‌க்கா வெற்றி:
ம‌க்கா வெற்றி கொள்ள‌ப்ப‌ட்ட‌ நாள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, ர‌ம‌ழான் பிறை 21 (10_ ஜ‌ன‌வ‌ரி‍‍‍_630கி.பி)இல் நிக‌ழ்ந்த‌து.

இறை இல்ல‌ம் க‌ஃப‌துல்லாஹ்வில், சிலை வ‌ண‌க்க‌மும் இணை வைப்பும் ஒழிக்க‌ப்ப‌ட்டு க‌ஃபா ப‌ரிசுத்த‌மாக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் சிலை வ‌ண‌க்க‌ம், வேரோடும் வேர‌டி ம‌ண்ணோடும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அல்லாஹ் த‌ன்னுடைய‌ மார்க்க‌த்தை‌ உய‌ர்வ‌டைய‌ச் செய்த நாள். அவ‌னுடைய‌ தூத‌ர் முஹ‌ம்மது(ஸ‌ல்) அவ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளுடைய‌ தோழ‌ர்க‌ளுக்கும், கூட்ட‌த்தின‌ர்க‌ளுக்கும்‌ வெற்றியை கொடுத்து க‌ண்ணிய‌ப்ப‌டுத்திய‌ நாள். இஸ்லாமிய‌ அழைப்புப் ப‌ணி உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌வ‌ கார‌ண‌மாக‌ விள‌ங்கிய‌ நாள்.
ஹ‌ம்ஜா இப்னு அப்துல்முத்த‌லிப்(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ந‌பி(ஸ‌ல்) அவர்க‌ள் ஹிஜ்ர‌த் செய்து ம‌தீனா சென்ற‌ ஏழாவ‌து மாத‌ம், ர‌ம‌ழானில் (கி.பி 622,ஏப்ர‌லில்) ஹ‌ம்ஜா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 முஹாஜிர்க‌ளைக் கொண்ட‌ ஒரு ப‌டைப்பிரிவை அமைத்து,முத‌ன் முத‌லாக‌ வெண்மை நிற‌க்கொடியையும் கொடுத்து, ஷாம் நாட்டிலிருந்து ம‌க்கா நோக்கிவ‌ரும் அபூஜ‌ஹ்லின் 300 பேர் கொண்ட‌ வியாபார‌க்குழுவை வ‌ழி ம‌றித்து தாக்குத‌ல் நாட‌த்த "ஸாஹிலுல் ப‌ஹ்ர்" என்ற‌ இட‌த்திற்கு அப்ப‌டையை அனுப்பி வைத்தார்க‌ள்.

ப‌னூ ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ப‌த்ரு யுத்த‌திலிருந்து திரும்பிய‌ பின் ஏழு நாட்க‌ள் க‌ழித்து ப‌னு ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர் நிக‌ழ்ந்த‌து. அக்கூட்ட‌த்தின‌ர் த‌ப்பி ஓடிவிட்ட‌ன‌ர். எதிரிக‌ளில் யாரும் கைது செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

ய‌ம‌ன் நாட்டுக்கு ப‌டை:
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ர‌ம‌ழானில்(கி.பி.631)அலி இப்னு அபூதாலிப்(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌ல‌மையில் ய‌ம‌ன் நாட்டுக்கு ஒரு ப‌டைப்பிரிவு சென்றார்க‌ள்.
ஜைது இப்னு ஹாரிஸா(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரமழானில் (கி.பி.628) ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ’உம்மு கிர்ஃபா’ என்னும் பெண்ணைப் பிடிக்கச் சென்றார்கள். இவள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய 30வீரர்களை தயார் செய்துவைத்திருந்தாள். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அத்தீயவளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டது.

ஃபாத்திமா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமழானில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்
அலி(ரழி) அவர்களின் வீரமரணம்:

ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு ரமழான் 17வது நாள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வந்த அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களை, காரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் கொலைசெய்ததால் அன்னார் (ஷஹீத்) வீரமரணமடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 63 ஆகும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபாவாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஆறு நாட்கள் சிறப்பாகஆட்சி செய்துள்ளார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 58ஆம் ஆண்டு ரமழானில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்

தீமைகளிலிருந்து எங்களை காப்பாற்றி
நன்மைகளின் பக்கம் எங்கள் முகங்களையும்
எங்கள் மனங்களையும் திருப்புவாயாக!..


அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..