.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

ஏன் இப்படி?

| | 5 comments

 
 
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர் அவனுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள்; இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். 

ஹிஜாப் அணிவது அவணின் வற்புறுத்தலுக்காக இல்லை; அவளின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்

 நன்றி நீடூர் டாட் காம்..
--------------------------------------------------------------- 
வெளியே செல்லும் இஸ்லாமிய பெண்கள்.தனியே பெண்களோடு செல்லும்போதும் . பைக்கிலோ அல்லது நடந்தோ கணவர்களோ அல்லது தன் உறவினரோ அவர்கள்கூட செல்லும்போதும். பலரை பார்க்கிறேன் முக்காட்டில் ஒருபகுதி எடுத்து அதனை முகத்தை மறைக்கிறேன் என்று கழுத்தும் மற்றும் முன்பகுதி தெரிவதுபோலவும் அதேபோல் பின்புறம் தலைமுடிகளோடு பூக்களையும் தொங்கவிட்டுக்கொண்டு செல்கிறார்கள். பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. 

அதேபோல் பல வெளியூர்களில் [நான் அடிக்கடி குற்றாலம்[மகன் படிக்கிறார்] மற்றும் பல ஊர்கள் செல்வதால் பார்க்கிறேன்] முஸ்லீம் பெண்கள் பர்தாவே அணிவதில்லை அப்படியே அணிந்தாலும் தலைதுணியை தோளிலேயே சுற்றிவைத்திருக்கிறார்கள். கடந்தவாரம் பஸ்ஸில் வரும்போது இரு பெண்களிடம் மனம் கேட்காமல் வாய் திறந்து கேட்டேவிட்டேன் ஏனிப்படின்னு அது பழகிடிச்சி என்கிறார்கள். இத்தனைக்கும் கூட வந்திருக்கும் கணவர்கள் தாடிவைத்து இஸ்லாமியமுறைப்படி காட்சியளித்தார்கள்.அவ்வூர்களில் அனைத்துதரப்பு மார்க்க பிரச்சார நோட்டிஸ்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கிறது. இருந்தும் பெண்களின் பர்தா விழிப்புணர்வு இப்படி இருக்கிறதே!ஏன்?

அதேபோன்று. பெண்பிள்ளைகளை நாகரீகமாக வளர்கிறோம் என்றபெயரில் அனாச்சாரங்களோடு அவர்கள் இணைவதைகண்டும் காணமல் இருக்கும் பெற்றோர்கள்.அதோடில்லாமல் அவைகளோடு அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்கள் அதேபொன்று கணவர்கள். இப்படி பொடுபோக்குதனமாக இருந்துவிட்டு பின்பு எல்லாம் போய்விட்டேதே என அழுதுபுலம்புவது ஏன்? வெளியே தெரிந்தால் அவமானமென்று மனதால் துடித்து மென்று விழுங்குவது ஏன்?
சுதந்திரம் கொடுங்கள் அதற்காக ஒரேடியாக ஆடவிடாதீர்கள் அப்புறம் அசிங்கபடுவதும் அவதிப்படுவதும் நீங்களுமாகத்தானிருக்கும். முஸ்லீமென்று பெயரலவில்மட்டும் இருந்துகொண்டு செய்வதெல்லாம் அசிங்களளிலும் அனாச்சாரங்களிலும் ஈடுபடாதீர்கள். 
மூஃமீன்களே! இவ்வுலகம் நிரந்தரமல்ல. நிரந்தர உலகத்திற்கான பரிட்சையே இவ்வுலகம். ஈமானுள்ளவர்களே அதனை புரிந்துகொண்டு  முழுமையாக ஈமானில் நுழையுங்கள்.உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான கடமைகளை சரிவர செய்து பேணி நடந்துக்கொள்ளுங்கள். இறைவன் அனைவரையும் காப்பாற்றுவானாக. நல்லோர்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்தருள்வானக..


இறைவா! 
உன்னையே வணங்குகிறேன் 
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

இறையருளை அடைய!

| | 2 comments

بسم الله الرحمن الرحيم



முன்னுரை
ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஹதீஸ் – 1
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)

சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.
நன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.

ஹதீஸ் – 2
அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)

சிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.
சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.

ஹதீஸ் – 3
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)

சிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.
குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.

ஹதீஸ் – 4
யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)

சிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.
நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஹதீஸ் – 5
நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

சிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே!

ஹதீஸ் – 6
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

சிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.
நோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹதீஸ் – 7
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

சிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.
நோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.

முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
 
மிக்க நன்றி இஸ்லாமிய தஃவா.காம் 
 ------------------------------------------------------------------------
அதனோடு நாம் இம்மாததில் நமது பாவங்களைவிட்டும் விலகி இனி அந்தபாவங்களின் பக்கம் போகாமலிருக்க இறைவனிடம் இறைஞ்சி வேண்டவேண்டும். அதோடுமட்டுமல்லாது இம்மாதம் மிகவும் புனிதமாதம் இதில் வீண் அலைச்சல்களை தவிர்த்து.  பெருநாளைக்கான துணிமணிகளுக்காக நாட்கணக்கில் மணிக்கணக்கில் நேரங்களை வீணடிக்காமல். அதேபோல் சகருக்கும் இப்தாருக்கும் சமையல்கள் செய்வதிலேயே மூழ்க்கிடக்காமல் முடிந்தவரை அமல்களைசெய்யவேண்டும்.அதிகமதிகம் திக்ருகள் செய்யவேண்டும்.


எல்லாம் வல்ல இறைவன்நம் அனைவருக்கும் ஈமானில் உறுதியை தந்து. உடல் ஆரோக்கியதத்தை தந்து. அதிகமதிகமாக நல் அமல்களை புரியும்படி செய்வானாக. அதன்கூலியாக நமக்கு நமக்கான சுவர்க்கத்தை அழங்கரித்துவைப்பானாக..ஆமீன் ஆமீன் ஆமீன்..

இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

எதில் நுழைக்கப் போகிறீர்கள்?

| | 4 comments

بسم الله الرحمن الرحيم

எதில் நுழைய விரும்புவோம். சொர்க்கத்திலா? நரகத்திலா? நாம் மட்டும் நுழைந்தால் போதுமா? நமது குழந்தைகள் நுழைய வேண்டாமா? அவர்கள் எதில் நுழைக்க விரும்புவோம். நன்மையின் பக்கமா? தீமைகளின் பக்கமா? சொர்கத்திலா? நரகத்திலா? கேள்விகள் நிறைய கேட்கலாம் ஆனால் பதில்கள்?


ஒரு குழந்தை நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் அதன் வளர்ப்பை பொருத்தது என பெரியோர்கள் சொல்வார்கள் அது எந்தளவிற்க்கு  உண்மையென்று வளர்த்து பார்த்தால்தானே தெரியும். வளரும் பிள்ளைக்களுக்கு எது நல்லது எது கெட்டது என எடுத்துசொல்லி அதனை நல்லதின் பக்கம் அழைத்து செல்வது பெற்றோர்களின் கட்டாயக்கடமை.  சரி பீடிகையெல்லாம் வேண்டாம் நேராக விசயத்திற்க்கு வருகிறேன்..

தற்போதெல்லாம் கல்வி காசாகிவிட்டது இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உலகே அறிந்தது. தரமான கல்வி வேண்டுமா? தராசில் நிறுத்துக்கொண்டுங்கள் காசை. ஆங்காங்கே முளைத்துவிட்டது பணம் பறிக்கும் பள்ளிக்கூடங்கள். அது அவர்கள் தவறில்லை எங்கு எதனைக் கண்டாலும் அதனை தேடியோடுவோர்களின் தவறு.
ஒரு குழந்தைக்கு கல்வி என்பது மிக மிக அவசியம் அதனை நெறிய முறையில் பயில்விக்கவேண்டியதும். கற்பித்துக்கொடுக்கவேண்டியதும் மிகவும் அவசியம். அதுவும் தற்காலத்தில் கல்விகற்கப்போகுமிடங்களில் சூழலைபொருத்தே குழந்தைகளின் மனவளர்ச்சியும் செயல்பாடுகளும் வளர்கிறது.

முன்பெல்லாம் காலை எழுந்தவுடன் முகங்கழுவி தேநீர் அருந்தியவுடன் பள்ளிக்கு ஓத அனுப்புவார்கள் பின் பள்ளிக்கூடம் முடிந்து மாலை வந்ததும் மீண்டும் பள்ளிக்கு ஓத அனுப்பி குர் ஆனை கற்றுக்கொள்ளவும் மார்க்கவிசயங்களை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ளவும் செய்வார்கள் ஆனால் தற்காலத்தில் அப்படியா? எழுந்ததிலிருந்து உறங்கும்வரை உலக கல்வியோடு போராட வைப்பதிலும். உலகவிசயங்களை கற்றுக்கொள்ள செய்வதற்க்குமே அவர்களை பாடாய் படுத்துகிறோம் பின்பு எங்கே மார்க்கத்தை பற்றியும் அதன் செயல்பாடுகளைபற்றியும் அறிந்துகொள்ள்போகிறார்கள். அப்படியே அறிந்தாலும் அதனை அரைகுறையாக அறிந்துகொண்டு வீண்விவாதங்களை ஏற்படுத்துவதும். வீணான குழப்பங்களை உருவாக்குவதிலுமே முனைகிறார்கள். சரி இதற்க்கு தீர்வுதான் என்ன?
என்ன எல்லாம் நம்மிடத்தில்தான் இருக்கிறது.  எப்படி? குழந்தை பிறந்ததும் எப்படியெல்லாம் வளர்க்கவேண்டுமெனவும் எப்படியெல்லாம் ஆடை அணிவித்து அழகு பார்க்கவேண்டும் எப்படியெல்லாம் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் வளர்ந்து ஆளானதும் இப்படிதான் இருக்கவேண்டுமெனவும் கற்பனைகளை கலந்து ஏதோதோ நினைக்கும் நாம் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமே நம் குழந்தைகளை தயாராக்குகிறோமே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நாம் உணர்வதேயில்லை. 

தரமான கல்விக்காக எங்கு கொண்டேனும் சேர்க்க விரும்புகிறோம். கொஞ்சகாலமெ நம்மிடம் இருக்கும் குழந்தைகளைக்கூட எல்லாம் எல்லாரும் இருந்தும் இதே படிப்புக்காக விட்டுபிரிந்து அனாதையாக நாமும் மாறி பிஞ்சுகளையும் அனாதையாக்கிவிடுகிறோம். ஆனால் இதே நிலையை மார்க்க கல்விக்காக செய்வோமா என்றால் ? தான். அதிலும் சிலர் மார்கத்திற்காக மறுமைகாக தனது வாழ்நாட்களை தனது குழந்தைகளை தயார் செய்யும் பெற்றோர்களாகவும் இருக்கத்தான்  செய்கிறார்கள். 

மார்க்கம் மட்டும்போதுமா உலக்கல்வி வேண்டாமா? இல்லை அப்படியில்லை உலக கல்வியோடு மார்க்கல்வியும் அவசியம் ஏனெனில் நமது சமூகத்திற்க்கு இம்மை மட்டுமல்ல வாழ்க்கை மறுமையிலும் உண்டு ஆக அதனை நோக்கியும் செயல்படவேண்டும். இரண்டு கல்வியும் கிடைக்குமிடமாக தேடி தனது பிள்ளைகளை சேர்த்திடுங்கள். அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் நல்லதொரு மனவளர்ச்சியையும் கொடுத்திடுங்கள்.விதைக்கும்போதே சரியாக விதைத்து அதனை சரிவர பராமரித்தால்தான் நல் விளைச்சலை பெறமுடியும். அதைவிடுத்து ஏதோ எல்லோரும் விதைக்கிறார்கள் நாமும் விதைப்போம் எனவிதைத்து வருவதை அறுவடை செய்வோமென நினைத்தால் நஷ்டமே மிஞ்சும். மிஞ்சும் நஷ்டம் நமக்குமட்டுமல்ல நாளை நமது குழந்தைகளுக்கும்தான்.

நாளை என்றால் அது மறுமை அங்கே உலக்க்கல்வியை பற்றி கேள்வி கேட்கப்படமாட்டாது. உலக்க்கல்வியை உலகில் தன்னை ஒரு நிலைப்படுத்திக்கொள்ள தன்னை இங்கு மட்டுமே பாதுகாத்துக்கொள்ள ஆனால் மார்க்கக்கல்வி அப்படியல்ல இம்மை மறுமை இரண்டிலுமே நன்மையை தேடித்தரும். இம்மை மறுமை இரண்டிலுமே நல் வாழ்வைத்தரும். நமது குழந்தைகள் இன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது இரண்டையும் விரும்புவோமா? ஒரு உலகில் இன்பட்டு மறு உலகில் துன்பப்படுவதை விரும்புவோமா? அல்லது ஈருகிலும் இன்பப்படுவதை விரும்புவோமா? தீர்மானிக்கவேண்டியது நாமே! தெளிவாக முடிவு எடுக்கவேண்டியதும் நாமே!  

அடித்தளத்தை நாம் சரியாக அமைத்துவிட்டால் மேல்கூரையை அவர்கள் சரி செய்துகொள்வார்கள்..

இறைவன் இவ்வுலகை படைக்கும்போது தந்த இஸ்லாம் அதன் தூய வடிவில் என்றென்றும் இருக்கிறது. ஆனால் அதனை பின்பற்றோருவோர் என்ற பெயரில் பல கொள்கைகள் பல பிரிவுகளாகி தானும் குழம்பி மற்றவர்களை குழப்பிக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு நடுவில், மார்க்கத்தை எப்படி அறிந்துகொள்வதென்ற கேள்விகளுக்கும் எங்கு சென்று அதனை அதன் தூய வடிவில் தெரிந்துகொள்வது என்ற கேள்விகளையும் முன்வைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் அதேபோன்று எங்கு அதற்கான முழுமையான கல்விக்கூடங்கள் இருக்கிறதென்று தெரியாமலும் தவிக்கிறார்கள்.முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில்கூட இஸ்லாமியமார்க்கத்தைபற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளில்லையே என ஏங்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

இதற்கான விடைகள் தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம்.
இவ்வருடம் இல்லாவிட்டாலும் மறுவருடத்திலிருந்து தமது குழந்தைகளை நேரான வழியில் வழிநடத்திச்செல்லும் பள்ளிகளில் சேர்க்க ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே உங்களின் பகிர்தல்கள்..

எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஈருலகிற்க்கும் ஏற்ற மனிதனாக்கி! மண்ணில் மறைந்தாலும் மறுமையில் நிலைக்கும்படி செய்வானாக!

 இறைவா! உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..