بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால் .
உறங்கும் முன் ஓதும் துஆ
اللهم با سمك أمو ت و ا حيا
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா.
பொருள்:
இறைவா!
உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்,
உயிர் பெறுகிறேன்.
நூல் புகாரி
--------------------------------------------------------------------
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி.
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்