.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அன்புள்ள ஆன்மாவே! -8 ஒழுக்கம்

| | 29 comments

بسم الله الرحمن الرحيم
ஒழுக்கம் [கற்பு நெறி]




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்

ஆன்மாவே!

[முஹம்மதே!] தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும்
தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
ஆண்களுக்குக் கூறுவீராக!
இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
[அல்குர் ஆன்: பாகம் 18-24.அந்நூர்]


தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட
பெண்களுக்கு கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தை வெளியே தெரிபவைதவிர மற்றவற்றை வெளிப்படுத்தவேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக்கொள்ளட்டும்.
தமது கணவர்கள். தமது தந்தையர்.தமது புதல்வர்கள்.தமது கணவரின் புதல்வர்கள்.தமது சகோதரர்களில் புதல்வர்கள்.தமது சகோதரியின் புதல்வர்கள்.. பெண்கள். தாங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில்
தள்ளாத வயதின் காரணமக பெண்கள்மீது நாட்டமில்லாத பணியாட்கள்.
பெண்களின் மறைவிடங்களை அறிந்துக்கொள்ளாத குழந்தைகள் தவிர.
மற்றவர்களிடம் தனது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்.
அவர்கள் மறைத்துவைத்திருக்கும் அலங்காரம் அறிப்படவேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்துக்கொண்டே நடக்கவேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே!
அனைவரும் அல்லாஹ்வை நோக்கியே திரும்புங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள்..


[அல்குர் ஆன்:பாகம் 18- 24.அந்நூர்]


ஒழுக்கம் என்பது மனிதனுக்கு மிக மிக முக்கியம்.
ஒழுக்கமற்று நடப்பவனை இவ்வுலகமட்டுமல்ல இறைவனும் வெறுத்து ஒதுக்குவான்.
ஒழுக்கம் என்பது வெளித்தோற்றத்துக்கல்ல உள்மனதுக்கு. மனம் ஒழுக்கத்துடன் இருந்தால்தான் மற்றது அனைத்தும் ஒழுக்கமாக இருக்கும்
ஒழுக்கம் மனதுக்குதான் உடலுக்கல்ல என்பதைப்போல். மனம்தான் ஒழுக்கமாக இருக்கிறதே. ஆதலால் உடலை மறைக்கும் ஆடையை எப்படியும் உடுத்தலாம் என்ற எண்ணம் சரியல்ல.

தனிமனித ஒழுக்கம் ஒரு தலைமுறையையே நன்நடத்தையோடு கொண்டுசெல்ல வழிவகுக்கிறது.
தனிமனித ஒழுக்கம் ஒன்று தரகுறைவாகிறதோ அன்று அவனின் வாழ்க்கையில் ஒருகரும்புள்ளி வந்துவிடுகிறது.

ஒழுக்கத்துடன் வாழ பூமியில் எத்தனையோ வழிகளிருந்தும் ஒழுக்கமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மனிதர்களை காணும்போது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்.

உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.
உன் நல்லொழுக்கத்தைப்பார்த்து அதைபோல் பிறரும் நடக்கும்படி உன்னை நீ தயார்படுத்திக்கொள்.

ஒழுக்கம் உயிரோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே [ஒழுக்கம் விழுப்பம் தரலாம். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்]

மனிதன் எப்படியும் வாழலாம் என்பதல்ல! இப்படித்தான் வாழனும் என்பதுதானே
அப்படியிருக்கும் பட்சத்தில் ஒழுக்கத்தை நிச்சியம் நாம் கடைப்பிடிக்கனும்.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வோரைப்பாருங்கள் அவர்கள் எவ்விதத்திலும் நிம்மதியடையமாட்டார்கள். பிறரையும் நிம்மதியடையவிடமாட்டார்கள்.
ஒழுக்கத்தின் காலம் கடந்துவிட்டதென்றும் ஒழுக்கம் உடைகளிலில்லை என்றுசொல்லி ஒட்டுத்துணியில் உலாவருகிறது நாகரீக ஒழுக்கம்.
நவ நாகரீக மோகத்தின் உச்சானியில் நாய்வாலைப்போல் நாங்களிருப்போம் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களாக தங்களை உணரும்வரை.

காலங்கள் கடந்தபோதும், மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், நாம் தந்தையின் வயிற்றிலிருந்து வந்துவிடவில்லை என்பது உண்மைதானே!
ஆக ஒழுக்கத்துடன் வாழ்வது சிறந்தது, மேன்மையானது..

ஒழுக்கத்துடன் வாழும்பொழுது
ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே நேசிக்கத்தொடங்கி இந்த உலகமே நம்மை நேசிக்கும்படியாகும். அனைத்திற்ககும் மேலாக
எல்லாம் வல்ல இறைவனின் நேசத்திற்கு உடையவர்களாகிவிடுவோம்
அந்த பாக்கியத்தை அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே! -7[”சீ” என்ற சொல்]

| | 9 comments

بسم الله الرحمن الرحيم


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று தாய் தந்தையை பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

23: என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்!
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறிவிடாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு.

24: அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காவும் தாழ்த்துவீராக!
“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுப்போல் இறைவா!
இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக! என்று கேட்பீராக!

25: உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள்
நல்லோராக இருந்தால் அவன் திருந்துவோரை மன்னிப்பவனாக இருக்கிறான்.
[அல்குர்ஆன் பாகம்:15- 17.பனூ இஸ்ராயீல்]

ஒருமனிதர் தாய் தந்தையரை அழுது கொண்டிருக்குமாறு விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்வதாக வாக்குப்பிரமாணம் அளித்திட அண்ணல் நபி[ஸல்] அவர்களிடம் வந்திருந்தார். அப்போது நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்:
தாய் தந்தையரிடம் திரும்பிச்சென்று எவ்வாறு அழச்செய்துவிட்டு வந்தாயோ
அவ்வாறு சிரிக்கச்செய்துவிட்டு வா!” என்றார்கள்.

[அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் [ரலி] ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்]

ஆன்மாவே!
இறைவன் இப்புவியை படைத்து அதில் மனிதர்களையும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். அதில் தாய் தந்தையென்ற உயரிய ஸ்தானத்தையும் கொடுத்து நம்முடைய இப்பிறப்பு இந்த இருவர்கள் மூலம்தான் இவர்களின் மூலமே இவ்வுலக வாழ்க்கையைக்காணவேண்டும் என்ற நிலையையும் வகுத்துள்ளான்.

நம்மை ஈன்றெடுக்க அவர்கள் படும் கஷ்டநஸ்டங்கள். துன்பதுயரங்கள். அதையெல்லாம் சொல்லில் விவரிக்கமுடியாது அத்தனை இன்ப துன்பங்களுக்கிடையிலும், நம்மை ஒரு பூப்போன்று பெற்றடுத்து. ஈ எறும்பு. அண்டாமல். விடிய விடிய கண்விழித்து காத்திருந்து. உழைத்து உழைத்து ஓடாகி, நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும்வரையில் அவர்களின்
கஷ்டங்களை சிறுதும் பொருட்படுத்தாமல், நமக்காவே வாழ்ந்து வரும்
தியாகத்திரு உள்ளங்கள்.

நாம் வளர்ந்து ஆளானதும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
அவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் கேட்பதற்க்கு தயாராகயில்லை,
அவர்கள் முதுமையடைந்துவிட்டால் அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிடுகிறோம். பெயருக்காக ஊர் உலகம் பேசும் என்ற ஒன்றுக்காக அவர்களை கூடவே வைத்துள்ளோம். வயது தளர்ந்தபோது அவர்களும் ஒரு குழந்தையே! என்பதைமறந்து அவர்கள் எது சொன்னாலும் குற்றமென கருதுகிறோம்.

தாயையாவது சிலர் மதிக்கிறார்கள் ஆனால் தந்தையை, வெகு மோசமாக விமர்சிக்கிறார்கள். அது ஏனென்று புரியவில்லை, சிறுவயதுமுதல் அவர்களுக்காக உயிரை உருக்கி உழைத்து கஷ்டப்படும் அவர்களை.
தரைக்குறைவாக பேசுகிறார்கள், ஆண்மக்களாலேயே பேசப்படுகிறார்கள்.
சினிமாக்களில், சீரியல்களில், அப்பனாஅவன், அவன்கிடக்கிறான் கஞ்சப்பய, [அதைக்கண்டு இவர்களும்]அது இதுவென வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். நீ தந்தையாகும்போது தெரியும்.தந்தையின் பொருப்பும்
அதன் தகுதியும்.

ஒருசில தந்தைகள் செய்யும்தவறு ஒட்டுமொத்த தந்தைகளுக்கும் இழுக்கை தேடித்தருகிறது, தாய் தவறுவதில்லையென்ற நம்பிக்கை அதே நம்பிக்கையை தந்தையின்மேலும் வைக்கவேண்டும். ஏனென்றால் இருவரில்லாமல் நாமில்லை. இருவருமே நமக்காகவே வாழும் ஜீவன்கள். சிலர் தந்தையென்ற பொருப்புக்களை மறந்து குடும்பம் என்ற பொருப்பை துறந்து தன் சுயநலன்களுக்காகவும் தன் சுகங்களுக்காவும் செயல்படுவது தவறே! அதற்கு அவர்களுக்கு இறைவனிடத்தில் கேள்வியுமுண்டு தவறுக்கான தண்டனையுமுண்டு.

ஆன்மாவே!
பிறந்ததிலிருந்து உனக்காகவே வாழும் அவர்களை இடையில்வரும் சொந்ததங்களுக்காக உதறித்தள்ளிவிடாதே! இடையில் வரும் [கணவன் மனைவி காதல் நட்பு] அனைத்தும் ஒரு கண் என்றால்,
உன் மற்றொருகண் பெற்றவர்களே! அவர்களை உதாசினப்படுத்திவிட்டு, வயதாகிவிட்டது இவர்களால் வாக்கு வாதங்கள், பிரச்சனைகள் அதான் அவர்களை விட்டு தனியே வந்தாச்சி என்ற போலிக்காரணங்களெல்லாம் கூறிக்கொண்டு அலையாதே! வயதான காலத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை

அவர்கள் உனக்கு கெடுதல் செய்தபோதும் நீ அவர்களுக்கு நன்மை செய்!
ஏனென்றால் அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தவர்கள். இத்தனை வருடங்கள் உனக்காகவே வாழ்ந்தவர்களால் இடையில் பாசம் பங்குபோடுவதை தாங்கயிழாமல், வரும் இயலாமையே! வாக்குவாதங்கள் அதைபுரிந்து நடந்துக்கொள்.. நீ இவ்வுலகத்தைப் பார்க்க உயிரும் உடலும் தந்தவர்கள்.
காலம் மிகமிகக் குறுகியது. இன்றைய பொழுது நாளை உனக்காகவும் திரும்பும் அப்போது நீ எதைச்செய்தாயோ அதையே நீயும் காண்பாய்.
இன்று அவர்கள் உன்னால்!
நாளை நீ உன் மக்களால்!

இன்று தூவப்படும் விதை, நாளை வேராக. அல்லது இன்றே மரமாக!

இறைவனுக்கு
அடுத்தபடியாக வணக்கத்திற்குறியவர்கள் பெற்றோர்களே!
வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமென்பதால், அந்த ஸ்தானத்தில் பெற்றோர்களை நாம் மதிக்கவேண்டும்.

அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும். முதுமையடைந்துவிட்டால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடாமல்.தனிமைப்படுத்திவிடாமல், கண்ணும் கருத்துமாக, மனம் நோகாதபடி நாமே பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
நாம் முன்போ அவர்கள் முன்போ.
நம்மால் நம் உயிர் இருக்கும்வரை அவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவும், மனகஷ்டமும் தராமல், பேணிக்காத்திடுவோம்
இறைவன் நம் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!

ஆன்மாவே!

இன்று தாய் தந்தையை பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

மனிதகடவுள்களின் மர்மலீலைகள் [அம்பலம்]

| | 35 comments

بسم الله الرحمن الرحي



[இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, எதார்த்தங்களையும் உண்மைகளையும் எனக்குத்தெரிந்தவகையில் எடுத்துச்சொல்கிறேன்..]

தற்போதுள்ள நிலவரப்படி எங்குநோக்கினும் மனிதக்கடவுள்களின்
மர்மலீலைகள். காவிச்சாமிகளின் களியாட்டங்கள். சாமியார்களின் சல்லாப லீலைகள். என்று தீயைவிட வேகமாக பரவிவருகிறது இணையங்களிலும். பத்திரிக்கைகளிலும். சேனல்களிலும். இதே புராணங்கள்தான். இதே செய்திகள்தான்.

இது ஏன்? எதனால்? இன்னிலைக்கு யார் காரணம்?
அவர்களா? அல்லது அறிந்தும் அறியாமல் இதுபோன்றவர்களுக்கு ஆதரவுதரும் மக்களா?
 மூட நம்பிக்கை மீது மோகம் கொள்வதா?.
ஒருவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது
திருவார்தையாகிவிடுமா?
அவர் யார்? கடவுளா?
மனிதன் கடவுளாகமுடியுமா?
முடியுமென்றால் எப்படி?

கடவுளென்பவன் தவறிழைக்காதவன்
மனிதனென்பவன் தவறிழைக்ககூடியவன்

ஒருவர் ஒருவிதத்தில் நல்லவரென்றால், மற்றொருவிதத்தில் கெட்டவராக இருப்பார். இதுதான் மனித நிலைபாடு, மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளான்.
ஒருவனுக்கு அறிவுகூடுதலாகயிருக்கும். ஒருவனுக்கு திறமைகள் கூடுதலாகயிருக்கும். இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் மேன்மையாகவிளங்குகிறான்.
அதற்காக அவன் கடவுளாகமுடியுமா?
அப்படிப்பார்த்தால் அனைவருமே கடவுள்களா?

ஏனென்றால்”
தவறிழைக்காத மனிதனே பூமியில்  இல்லவேயில்லை
அப்படியிருப்பதாக சொன்னால் அவரின் மனசாட்சிக்குதெரியும் தான் சிறுதவறுகூட இழைக்காதவரா? என்று.

மனிதனாகப்பட்டவன் தவறிழைத்து,தன்னைத்திருத்தி,
தனிமனித ஒழுக்கத்துடன் வாழநினைக்கவும், அவனுக்கு வழங்கப்படிருக்கும் வாழ்க்கையிது, பரிசோதனையான இவ்வுல வாழ்க்கை, இதில்தான் அடங்கியிருக்கு அவனின் வெற்றியும் தோல்வியும்.

மனிதனை மனிதன் கடவுளாக எப்படி ஏற்கிறான் என்றுதான் தெரியவில்லை?
தன்னைபோன்றே.உண்ணும், உடுத்தும், உறங்கும்,
மலம்ஜலம் கழிக்கும். உணர்ச்சிகளிருக்கும். ஆசாபாசங்களிருக்கும்.மரணிக்கும்.
இப்படி அனைத்திலும் தன்னைப்போன்றே செயல்படும் ஒருவன் எப்படி கடவுளாக முடியும்.
துறந்து வாழ்ந்தால் கடவுளா?
துறவரம் என்றால் என்ன?
பின்பெதற்கு ஆண்பெண் என்ற இரண்டு ஜோடிகளைப்படைத்து
ஒருவருக்கொருவர் துணையை உண்டாக்கப்பட்டது, அவரவர் நிலத்தில் அவரவர் உழுதுபயிரிடுங்கள் என்றுதானே!
துறவரம் என்றபெயரில் காணும் நிலங்களிலெல்லாம் உழுது பயிரிடுவதற்கா??

துறவரமென்றால் தூய்மையின் உறைவிடம்தானே!
ஆனால்?

இங்கே காலங்காலமாக நடந்துவருவதென்ன?
துறந்துவிட்டோமென்ற போர்வையில் குத்தாட்டங்களோடும், குட்டிபுட்டிகளோடும்.  அபலைப்பெண்களின் அங்கங்கள் இதுபோன்றவர்களின் அர்ச்சனைக்கு ஆளாக்கப்படுகிறன.
அழகிகள்கூட அடிபணிந்து அலைமோதுகின்றன.
மனிதர்களின் மனங்கள்
அடிமாட்டைவிட மோசமாகவல்லவா மழுங்கிக்கிடக்கின்றன.

எத்தனை ,எத்தனை. இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்றாலும். இதை அன்றே மறந்து,வேறு ஏமாற்றத்திற்கு தயாராகும் மக்களை நினைத்துதான் பரிதாமாக இருக்கிறது.

மனிதனைக் கடவுளென்று நினைத்து அவருக்கு தீபஆராதனையெடுத்த கைகளின்று, அவர்களின் உருவபொம்மைகளுக்கே தீயிட்டுக்கொளுத்தும் வேடிக்கைகள். மகானாக பார்த்த கண்களெல்லாம் மண்புழுவைவிட கேவளமாக பார்க்கும் வினோதங்கள். அவரின் பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்தவர்களெல்லாம் இன்று தங்கள் பாதங்களால் அவரின் உருவத்தைபோட்டு மிதிக்கும் அவலங்கள்.
மலர் மாலைகளை சூட்டி மண்டியிட்டவர்களெல்லாம்.
செருப்புமாலையணிவிக்கும் சிறுபிள்ளைதனம் என. தாங்களே ஏமாந்துவிட்டதை தாங்கயிலாமல்,தங்கள் உயிரைவிட பெரிதென போற்றிபுகழ்ந்தவர்களையே இன்று தூற்றுகிறார்கள். தூக்கியெறிகிறார்கள்.

இன்னிலைக்கு எது காரணம்? அறியாமையா? அல்லது அறிந்தும் அறியமறுப்பதா? நம்பிக்கையா? அல்லது நம்பிக்கையென்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதா? அறியாமை காலத்தில் நடந்தால், அது அறிதலில்லாததது எனலாம்.

ஆனாலின்று, அத்தனையும் அப்பப்ப அறிந்துவிடும் காலம். 5 மணிக்கு அறியாததை 5.5 மணிக்கு அறிந்துவிடுமளவிற்கு, அறிவியலும் விஞ்ஞாமும் அளவில்லாமல் அறியாதவர்கள்கூட அறியும்படி அத்தனையும் ஆங்காங்கே உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறன.
ஒருவேளை அறிவு அதிகரித்துவிட்டதாலும் வந்தவினையாக இருக்குமோ?

கடவுளுக்கும். மனிதனுக்கும். வித்தியாசமில்லையென்றால்,
உலகம் வந்ததெப்படி? நாம் பிறந்தது எப்படி? மனிதன் கடளாகமுடியுமென்றால் ஆதாம்தான் நம்மைப்படைத்தாரா? ஏனென்றால் அவர்தானே முதல்மனிதர்.
அவர். தானே தன் விலாயெலும்பிலிருந்து தன் துணையை படைத்துக்கொண்டாரா?
இல்லை நம்மைப்பெற்றெடுத்த தாய் தந்தை கடவுளா? அவர்கள் எவ்விதத்திலும் தவறிழைக்காமல் இருக்கிறார்களா?
இறைவனுக்கு அடுத்தபடியாக வணங்கக்கூடிய தகுதிகள் தாய் தந்தை இருவருக்கும்தான். ”ஆனால்” வணக்கம் என்பது ஒருவருக்குதான். அனைத்திலும் அனைத்திலும் சிறந்தவன் எவனோ அவனே வணக்குத்திற்கு தகுதியானவன்.
அறிவில்லாதவருக்கூட இதைபற்றிய அறிதல் இருக்கும். அறிந்தவரும்கூட அதை அறியாதவர்போல் நடப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

முதல் மனிதரான ஆதமை மண்ணால் படைத்த கடவுள்
அவர்மூலம் உருவான அத்தனை மனிதனப்பிறப்புகளையும் மீண்டும் மண்ணுக்கே கொண்டுசெல்வதுகூடவா விளங்கவில்லை?

சரி கடவுளென்பவன்,அல்லது கடவுளென்பது, எப்படிருக்கவேண்டும்.
மனிதனை மீறிய, இயற்கையைமீறிய, உலகிலுள்ள அனைத்து சக்திகளையும்மீறிய. ஒன்று அவனிடமிருந்தால்தான் அவன் கடவுள் .
இல்லை அதுகடவுள்.
கடவுளென்பவன் தன்னிகரற்றவன். அவன் தனித்தவன், மிக மிக தூய்மையானவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை
மனைவி மக்கள். இல்லறவாழ்க்கை.உணவு. உறக்கம். இச்சை. மரணம்
என எந்ததேவையும் இல்லாதவன். உலகை இமைக்காமல் காத்துவருபவன்,நன்மை தீமையை முன்பே அறிந்தவன் மொத்ததில் அவனுக்கு இணை அவனே! அவன்தான் கடவுள்.

கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும். அதற்காக
கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.உண்மையையும் போலியையும் பிரிதறியப்பாருங்கள்.
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்.
சட்டத்தில்கூட கொலை செய்தவரைவிட அதற்கு துணையாக தூண்டுகோலாக இருந்தவருக்கே தண்டனை அதிகமாம்.

இன்று பரபரப்பாகும் செய்தி. நாளை மறைக்கப்படும்,
மறுநாள் மறைந்துவிடும், அதன் மறுநாள் மன்னிக்கப்படும்.
இதுவே தொடர்கதையாகி
காலமுழுக்க ஏமாந்தயினம் மனிதயினமென்ற கறைய அடியோடு நீக்குங்கள்.
வார்த்தைகளில் வசியப்படுத்துபவரெல்லாம் கடவுளல்ல!
போற்றிப்புகழும் நீங்களே! போலியென்றதும் போட்டு உடைக்கிறீர்கள்.
மனிதனை மனிதனாய் ஏமாற்றுவது தவறென்றாலும் அது இயல்பு.

”ஆனால்” மனிதன் தன்னை இறைவனென்று மனிதனையும் ஏமாற்றி, அந்த இறைவனையும் ஏமாற்றுவதுதான் மகா மகா குற்றம்.
இதை மன்னிக்கவேமுடியாது.

இதுபோன்ற போலிக்கடவுள்களை, அல்லது கடவுள்களின் ஏஜெண்ட் என  நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம். இதுபோன்ற ஏமாளி மனிதர்களை நினைத்து மிகுந்த மனவேதனையோடு முடிக்கிறேன்.
உலகத்தில் நல்லது நடக்குமென்ற எதிர்பார்ப்புடன் நானும்  மனிதமுள்ள மனுசியாய்.....................




இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..