.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

முத்தான முத்துக்கள்.

| | 7 comments

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

1.  ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ,அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்.
இன்னும் அவர்கள் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
                                                                          அல்குர்ஆன்-4:124

2.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைகிவஸ்ஸலம் அவர்கள் கூறினார்கள்:  கண்ணேறு [கண் திருஷ்டி] உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் வெல்லமுடியுமானால்,கண்ணேறு அதை வென்றிருக்கும்.  
                                                                          நூல்:முஸ்லீம்:4405

3.  நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.மேலும் [வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லும்] தீயவழியாகவும் இருக்கிறது.

                                                                        அல்குர்ஆன் - 17:32


தீமைகளிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நன் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக ஆமீன்..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..