.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

நன்மைகளை விதை..

| | 7 comments

بسم الله الرحمن الرحيم


அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவனின் சாந்தியும் சமதானமும்.அனைவரின்மீதும் உண்டாகட்டும்.

 இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு.ஹிஜ்ரி 1432 முஹர்ரம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை தெளிவுபடுத்தியுள்ளதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். வருடத்தின் முதல் மாதமாக புனித முஹர்ரம் மாதம் இருப்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும் புதுவருடப்பிறப்பின் வாழ்த்துக்கள்.

ஏக இறைவன் படைத்த இப்பூமியில், மகத்துமிக்கவனாக மனிதனையும் படைத்தான். மற்ற அனைத்தையும் படைத்தவன் அவைகள் மனிதனின் உபயோகதிற்காகவே படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவிக்கும் மனிதன் தன்னை படைத்த அவனை மறந்திடாவாறு, ஐந்துகடமைகளை உருவாக்கினான். அதனில்

முதன்மையானதாக இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று
அவனை முழுமையாக பின்பற்றவும்.

இரண்டாவதாக அவனை வணங்குவதற்காக ஐவேளை தொழுகையை ஏற்படுத்தியும்.

மூன்றாவதாக.
ரமளான் / நோன்பு.

புனித மாதமான ரமளானில் நோன்பென்னும் விரதமிருந்து மனிதன் தன்னுள்ளத்தையும் தன் உடலையும் தூய்மையாக்கிகொள்ளவும்.

நான்காவதாக.

ஜகாத் / ஏழைவரி. இருப்போர் இல்லாதோர்களுக்கு வாரிவழங்குவதையும்.

ஐந்தாவதாக.
இறுதிக்கடமையாய் புனிதப் பயணமான ஹஜ்ஜையும் நிறுவினான்.

அவன் மனிதர்களுக்கு முன் நன்மைகளையும் தீமைகளையும் கொட்டிக்குவித்து, அதனை பிரித்தறிக்கூடிய ஆறாவது அறிவையும் கொடுத்து படைத்துள்ளான்.படைதவன் வகுத்துக்கொடுத்த மிக அழகான நெறிமுறைகளையும். அதற்காக அவன் வழங்கிய வேதமான திருகுரானையும். அதனை நமக்கறிவிக்க அனுப்பிய திருநபியையும் வழங்கினான்.இறைவன் மிகவும் நுண்ணறிவு உள்ளவன். அவன் இவ்வுலகில் மனிதர்களை படைத்ததின் நோக்கத்தை அவர்கள் அறிந்து அவன் கூறியவற்றிக்கு செவிசாய்த்து. இன்பம் துன்பம் தானறிந்து, தீமைகள் தன்முன்னே அழகானதாக கண்முன்னே காட்சியளித்தபோதும் அவைகளைவிட்டு விலகியிருந்து,மூடப்பலக்கவழக்கங்களை துடைத்தெறிந்து,ஆணவ ஆகபாவம் விட்டொழித்து, தனக்குதரப்பட ஆறாவது அறிவால் சிந்தித்து செயல்பட்டு, நன்மைகளின் பக்கம் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்றுதான்.

எது நல்லது எது கெட்டது என பிரித்தறியும் பக்குவம் நம் அனைவரிடமுமே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அறியத்தவறிவிடுபவர்களுக்காக பிறர்மூலம் அறிவுறுத்தபடுகிறது. அதனினைக்கொண்டும் நம் அறிவினைக்கொண்டும் நன்மையின்பக்கமே நம் முகங்களும். மனங்களும் சாய்ந்துகிடக்கட்டும். இறைவனின் சாந்தி என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும்..

இறைவா! என்பாவங்களை மன்னிதருள்வாயாக!
நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

இறுதிக்கடமையும். குர்பானியும்..

| | 14 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்..

ஐந்து கடமைகளில் இறுதிகடமையாக ஹஜ் செய்வதை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். வசதியுள்ளோர்களின்மீது கட்டாயக்கடமை. வசதியில்லாவர்களை வசதியுள்ளோர்கள் அனுப்பிவைக்கலாம். அதற்கான கூலியை இறைவனிடத்தில் பெறலாம்.

இஸ்லாத்தில் வணக்கங்களை பொருத்த வரையில் சக்தி இருந்தால் மட்டுமே கடமைகளை செய்ய வேண்டும். சக்தி இல்லாத போது அந்த கடமைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்கவும்மாட்டான். அவர்களின்மீது சுமைகளை சுமத்தவும் மாட்டான்.

இறைவன் எவ்வித தேவையுமற்றவன். மனிதகுலத்திற்கு அவன் செய்யும் அத்தனையும் நன்மைக்கே என விளங்குவோர்க்கு நற்கூலியுண்டு.
இறைவன் தனது திருமறையில்  கூறுகிறான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். 3 : 97

இறைவனின் பொருத்தைநாடி, அவனின் அருளைவேண்டி, ஹஜ்ஜின் கடமைகளையும் நிறைவேற்றுவது முஃமீன்களின் மிகச்சிறப்பான
வணக்கவழிபாடாகும்.

இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நிறைவேற்ற உறுதியான ஈமானையும். உடலாரோக்கியத்தையும், மனவலிமையையும்.  வசதியையும்.  தந்தருள்வானாக! ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


 குர்பானி கொடுப்பதின் விளக்கம்.
நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..

அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.


இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)

இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.


வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)

குர்பானி ஓர் கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.

அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………

ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.

குர்பானி கொடுக்கத் தகுதியானவை:

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)


மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.

ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நேரம்:

துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..

“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)

”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)

என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.

பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)

குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)

குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)

குர்பானியின் நோக்கம்:
[குர்பானி பிராணிகளாகிய] அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)

எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களை பிழைபொருந்து,
எங்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் பரிபூரண
ஈமானோடு ஐந்து கடமைகளையும் நிறைவேற்றும் வலிமையைத்  தந்தருள்வாயாக!
ஈருலகிலும் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
நரகநெருப்பிலிருந்து பாதுகாத்து சுவனத்தின் சோலைகளில் நிரந்த இடங்களைத்தந்து  பாதுகாப்பாயாக!

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

ஒற்றுமையோடு செயல்படுங்கள்...

| | 11 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்

.அன்புள்ள நல்லடியார்களே!
10. நம்பிக்கைகொண்டோர்[அனைவரும்] சகோதரர்கள் தாம். எனவே சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் அல்ஹுஹ்ராத் பாகம்:26 

ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்
நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் நம்பிடறி நரம்புக்கும் மிக அருகாமையிலிருந்து நன்கறிபவனும்,  மனங்களில் ஒளிந்துள்ளதையும் மிக நுண்ணியமாக அறியக்கூடியவனும் இறைவன் ஒருவனே
நாளை அவனிடமே நம்முடை மீளுதல் உள்ளது.

இதை மறந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதும், சண்டையிட்டுக்கொள்வதும், குற்றங்கள் சுமத்திக்கொள்வதும்,அதுவும் பொதுயிடங்களில் நம்மைபற்றி நாமே தரைகுறைவாய் வார்த்தைகளை வாதங்கள் என்றபெயரில் வரைமுறையற்று நடந்துகொள்வதும், இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயலாகும். அச்செயல்களை அனைத்தையும் தவறானவைகளென அறிந்துகொண்டே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுதான் வருத்தமாக உள்ளது.

சாதரண மக்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியும் முன்பே அதன் சாராம்சமான இஸ்லாமியனைப் பார்த்துதான் மற்ற சமுதாயதவர்கள் இஸ்லாத்தின்பேரில் நம்பிக்கை வைப்பதும், அவநம்பிக்கை வைப்பதும் என தெரிந்திருந்தும் இதுபோன்றவர்களின் செயல்களால் இஸ்லாத்தின்பால் ஓர் அச்சத்தை ஏற்படுதிவிடுமோ என்ற ஆதங்கம்தான் இப்பதிவையே எழுததூண்டியது.

சொல்லலாம் இஸ்லாமியனைகண்டு இஸ்லாமல்ல என்பது உண்மைதான். ஆனால் உண்மையான இஸ்லாமியரைக் கொண்டுதான் இம்மார்க்கமே உருவானதும் பூர்த்தியானதும். இம்மார்க்கத்தின் ஆணிவேரே ஓரிறைக்கொள்கை அதை ஒற்றுமையோடு ஓரினமாக பற்றிபிடித்து காப்பது என்பதுதானே சிறந்தது

அந்த ஓர் இறைவனின் வாக்குகளை மீறி நடப்பது எவ்விதத்தில் சரி. மனித மனங்களுக்குள், அவர்களின் கோட்பாட்களுக்குள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறைவன் என வரும்போதும் மார்க்கமென வரும்போதும் அவனின் சொல்படி நடக்கவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. ஒற்றுமையுடன் அல்லவா செயல்படவேண்டும். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு..

மற்ற சமுதாயம் இதைபார்த்து போற்றும்படியாக நடக்கவேண்டுமே தவிர இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லையே என்ற எண்ணைத்தை உருவாக்குவது சரியா? ஒருகுடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை வீதிக்கு வருமானால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துமோ அதைவிட பலமடங்கு..தன்னுயிரான சன்மார்க்கத்துகுள் தன்இனத்தைச் சார்ந்த சகோதரர்களுக்குள் வாதமென்ற பெயரில் அடுத்தவர்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுதான் வேதனையளிக்கிறது

இஸ்லாமார்க்கத்தில் சாதிமத பேதமில்லை இனவெறி, நிறவெறியில்லை அனைவரும் இறைவன்முன் சமம். லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலில்லாஹ். வணக்கத்துக்குறியவன் இறைவன் ஒருவனை தவிர யாருமில்லை . முகமது நபி இறைவனின் திருத்தூதர். ஆக இறைவேதத்தின்படியும் இறைத்தூதர் அவர்களில் சொல்படியும் உலகிலுள்ள அனைவருக்காகவும் அனைவரின் நல்வழிக்காவும் அதனை பின்பற்றி நடக்க சொல்லியிருக்கிறார்கள். அதனைவிடுத்து ஆளாளுக்கு நான் சொல்வதுசரி நீ சொல்வதுசரியென வாக்குவாதம் செய்து ஒரேகொள்கையில் பலபிரிவுகளாக பிறர் சிரிக்கும்படி நடப்பது சிறந்த்தாகுமா!

மனிதன் என்பவன் தவறிழைக்கக்கூடியவன். அப்படிதான் படைக்கப்பட்டுள்ளான். யாரும் தவறாமல் இருந்ததேயில்லை ஏதோ ஒருவகைகளில்.தவறின்பக்கம் போகக்கூடும்.அது தவறென்று உணர்ந்து அதைதிருத்தி திருந்திவாழ நினைக்கும் மனிதன் மனிதனில் சிறந்தவனாகிறான்.

மார்க்க விசயத்திலும் சரி. மனவேறுபாடு விசயங்களிலும் சரி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனைவரும் அமர்ந்துபேசி நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதே மிகசிறந்த மார்க்கவழியாக நமக்கு சொல்லிதரப்படிருக்கிறது அதன்படி நாம் அனைவரும் நடக்கவேண்டும்

எல்லாம் வல்ல இறைவன்முன் நாம் நிலைதடுமாறி நின்றுவிடாமலும், அவன் சொல்லை மறுதவர்களாக ஆகிவிடாமலும், இறைவாக்கை மீறி எவ்விதத்திலும் குற்றமிழைத்த பாவியாகிவிடாமலும், நன்மையின்பக்கம் நம்முகங்களும் மனங்களும். சாய்ந்தைவையாகவும், இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை பெற்றவர்களாக ஒற்றுமையென்னும் பலத்தை பலமாக பற்றிப்பிடித்தபடியே. இறைவனின் சொல்படி நடந்து சுவர்கத்தில் நுழைய ஏக இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.

நான் அதிகம் அறிந்தவளில்லை என்றபோதிலும். இறைவனால் எனக்கு தரப்பட்ட அறிவால் விளங்கியவகையில் இதை எழுதியுள்ளேன். இதில் பிழைகளில் இருப்பின் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்..


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..

அன்புள்ள ஆன்மாவே!15 [வரம்பு மீறாதே!]

| | 10 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனனும். நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனிதன் இறைவனிடமே வரம்பு மீறுவதைப்பற்றி, எனக்குத்தெரிந்தவரையில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்..


114:அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர்கூறப்படுவதை தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?

பயந்துகொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். மறுமையில் கடும் வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் பாகம்1: அல்பகரா

1.முஹம்மதே!]படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!


2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.

3. ஓதுவீராக உனது இறைவன் கண்ணியமானவன்.

4.அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.

5.அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத்தந்தான்.

6.7.அவ்வாறில்லை! தன்னை தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகின்றான்.

8. உனது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

9..10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?

11. 12. 13. அவர் நேர்வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலச்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?.

15 அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

16. அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.

17. அவன் சபையோரை அழைக்கட்டும்.

18. நாம் நரகின் காவலைரை அழைப்போம்.

19.எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர் ஸஜதாச் செய்வீராக!
அல்குர்ஆன் பாகம் 30: அல் அலக்

அன்புள்ள ஆன்மாவே!
உன்னால், உன் உள்ளத்தால், ஒருவருக்கும் தீங்கிழைத்துவிடாதே! அதுவும் உனக்கு உயிர்கொடுத்து உடல்கொடுத்து இவ்வுலகில் உலாவவிட்டிருக்கும் இறைவனோடு பிணக்கம் கொண்டுவிடாதே!
உன்னை இப்பூமியில் படைத்ததே! அவனை வணங்கி வழிபடவே! கூடவே உன் வாழ்க்கையையும் நெறிப்படுதவே!

மனிதன் மனிதனின் விசயத்தில் வரம்பு மீறுவதே பாவம். அதைவிடப் பெரும்பாவம் தன்னை உண்டாக்கிய இறைவனிடமே
வரம்புமீறி தர்க்கம் செய்வதுதான்.

இறைவனை வணங்கி வழிபட கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளில். அங்குவந்து வணங்குவோரை தடுப்பதும் தர்க்கம் செய்வதும் முறையா?
இறையில்லத்தில் இணைகற்பிப்பதும் சரியா?

ஆங்காங்கே மனிதனை மனிதன் வெட்டுவதும். குத்துவதும். சாடுவதும். சண்டையிடுவதும். நீயா? நானா? எனபோட்டியிடுவதிலுமே மனிதன் தன்னைத் தொலைக்கிறான் தன் மனிதம் தொலைக்கிறான்.
இரக்கமிழக்கிறான். கடைசியில் இருளில் அடைகிறான்.

இப்படி தன்னைத்தொலைக்கும் மனிதர்களுக்கிடையில் தன்னப்படைத்த இறைவனை நினைக்க இறையில்லம் சென்று இறையருள் வேண்டுபவனை தடுப்பதும். ஏனென்று கேட்டால்  இறையில்லைத்தை இடிப்பதும் இறைவாசியா!

இறைவனோடு மனிதனுக்கென்ன கோபம். ஈன்றெடுத்த தாயின்மீது
இருக்கும் பாசம்கூட, அந்த தாயையும். தன்னையும். இணைத்த இறைவன்மேல் வராததென்ன?

இறைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன்
இரக்கமில்லாமல் இருப்பானா? பிறருக்கு இன்னல்கள் தருவானா?
இறைவனை வணங்குமிடத்தையும். அவனை வணங்குபவனையும்.
தடுப்பதும். கெடுப்பதும். இறையச்சமில்லாமல் செய்யும் செயலல்லவா.

சகோதரத்துவமும். சமத்துவமும். சாந்தியையும். அமைதியையும். விரும்பும் மனங்கள். இறை சத்தியத்தையே விரும்பும்.
சத்தியம் சாகாதெனில் சகோதரத்துவம் மகத்துவம்பெறும்.

மனிதர்களை மனிதம்கொண்டு பார்க்கும் எந்த மனிதர்களும்,
மற்ற மனிதர்களோடு சண்டையிடுவதுமில்லை. சினம் கொள்வதுமில்லை.
மனிதம்கொண்டு பார்க்கும் மனம். சாந்தியிழப்பதுமில்லை.

ஒற்றுபட்டல் உண்டு வாழ்வு என்பதைபோல். ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் வெறுக்கவேண்டாம். விரோதம் கொள்ளவேண்டாம்.

இவ்வுலகில்.சில நேரம் அநியாங்கள் அத்துமீறும்போது நியாங்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கும்.
கட்டப்படிருந்தாலும் அதனைமீறிய வெளிச்சம் வேகமாய் வெளியுலகை எட்டிப்பார்த்து நியாத்தைக் காட்டிக்கொடுக்கும்

இறைவனின்முன் நாம் அனைவரும் ஒற்றுகூடி நிற்கும் நாளொன்று வரும் .  அவரவர் செய்த நன்மை தீமைகளுக்குதகுந்தவாறு.
தீர்ப்புகள் வழங்கப்படும்.அங்கே அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.

இறைவனின் கோபத்திற்க்கும் சாபத்திற்க்கும் ஆளாகிவிடாமல். அவனை வணங்கி,நேர்வழியில் செல்ல எல்லாம் வல்ல அவனிடம் இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யவேண்டும்.

இறைவனை அஞ்சி இவ்வுலகில் நல்லறம் புரிவோருக்கு சொர்கமே கூலியா வழங்கப்படும்.
அந்த சொர்கத்தை நமக்கு கிடைக்கும்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியாவது செய்யவேண்டும்

பாவச்செயல் களைந்து. நல்லறங்கள் புரிந்து. நன்மைகளையடையந்து. நன்மைகளின் மூலம் சொர்கத்தினை அடைய ஏக இறைவன் உதவிசெய்வானாக ஆமீன்.


அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
என்பாவங்களை மன்னிதருள்வாயாக!

இறையடியார்களே! உங்களைத்தான்..

| | 12 comments

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும்.
 அனைவர்மீதும் இறைவனின் அருள் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்தும். அனைத்தும் இறைவனை நினைத்து அன்புடனும். அச்சத்துடனும் வணங்கும். இதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால்  மனிதர்கள் மட்டுமே. அதை பொழுதுபோக்கிற்காக பொடுபோக்குதனமாக வெரும் கடமைக்காக செய்வது.அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்..

சில பொடுபோக்கு தொழுகையாளர்களை  பார்த்ததால் மனம் நொந்தது அதனால் இதை எழுதும்படியானது.

இறைவனை வணங்கவேண்டும் இது கட்டாயக்கடமை. எப்படி? அது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த விசயம். அறியாதவர்களும் உண்டு. ஆனால் அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யும்போது மனம் ரணப்படுகிறது.

இறைவனை நினைத்து தொழுகைக்கு தயாரகும் ஒருவர் முதலில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒழுவின் மூலம்.
ஒழுவை [சில இடங்களில் உளு என்பார்கள்] சரியாக முடிக்கவேண்டும் ஒழு என்றால் இருகைகள் கழுவுதல்.  நாசிக்கு  நீர்விடுதல்.முகம் கழுவுதல். முட்டுக்கைகள்வரை கழுவுதல்.தலையை தண்ணீரால் தடவுதல். காதுகளையும் தண்ணீர்கொண்டு தடவுதல். இருகாள்களையும் கழுவுதல்.இது ஒழு செய்யும் முறை. இதுசெய்யும்போதும் செய்தபின்னும் இறைவன் சொன்னதுபோல்  இருக்கவேண்டும்.

விரல்களில் நெயில்பாலிஸ் போட்டிருத்தல் அதன் தடிமன் தனம் ஒழுச்செய்யும்போது தண்ணீர் சேரவேண்டிய இடத்துக்கு சேராது அதனால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் சிலர் ஒழுசெய்துவிட்டு துணிகொண்டு நன்றாக துடைத்துவிட்டு பவுடர்பூசி மேக்கப்போட்டு. உதட்டுச்சாயம் அதுவும் திருமணவிழாவிற்கு செல்வதுபோல் இட்டுக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு[சுர்மா அல்ல] மஸ்காரா ஐபிரோ செய்துகொண்டு தராவீஹ் தொழுகைக்கு வருகிறார்கள் இது தொழுகைக்கு கூடுமா?

பெண்கள் அலங்காரம்  செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக  பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு  தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.

அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு.  குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை.

ரிங்டோனில் ஒலிக்கும் பாட்டின் சப்தம் பிறர் தொழும்போது அவர்களுக்கு எந்தளவு கவனத்தை சிதறடிக்கும் என்பதை யாரும் நினைத்துப்பார்பதில்லை. இறைவனைத் தொழும் இடம் என்றால் எவ்வளவு பயபக்தியிருக்கவேண்டும். அல்லது சிறு அச்சமாவது இருக்கவேண்டாமா?
இறைவனுக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளில் தொழுகை மிக மிக முக்கியமானது அதை பேணுதலுடல் தொழுவதே சாலச்சிறந்தது.
இறையடியார்களான நாம் அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது
இறைவனுக்கும். நமக்கும். எவ்வித தடையுமில்லாது அவனிடம் நாம் நம்மை  நிறைவான முறையில்  ஒப்படைக்கவேண்டாமா?
 இந்த நோன்புக்கு இருக்கும் நாம் அடுத்த நோன்புவரை ஏன் அடுத்த நாள்வரை இருப்போமா என்பது நமக்குத்தெரியுமா?
அனைத்தும் அறிந்துகொண்டே பிழைசெய்வது சரியா?

நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?

அழகு சாதனங்களில் தொழுகைக்கு, ஒழுவுக்கு கூடாதவைகள் கலக்கப்படிருக்கா என நாம் அறியோம். சில சொல்கிறார்கள் இது ஹலாலாக செய்யப்பட்ட லிஃப்ஸ்டிக் அதனால் தடவுகிறோம் என. இருந்துவிட்டுபோகட்டும். அதையேன் இறைவனின் சன்னிதானத்தில்
அழுது தொழும் அந்நேரத்தில் இட்டுவரவேண்டும் அங்கே பயபக்தியிருக்குமா? பொடுபோக்குதனம் இருக்குமா? அல்லது இறைவனின் மீது சிறு அச்சம்தானிருக்குமா?

இறைவனின்முன் ஓர் அச்சமின்றி நாளை அவன்வசம் மீழ்வோம் என பயமின்றி நடப்பதுதான் அதுவும் அனைத்தும் அறிந்தவர்கள் நடப்பதுதான் வேதனையான விசயம்..

இதை அவரவர் வீட்டு ஆண்களும் தன் அறியாப்பெண்களுக்கு நிச்சயம் சொல்லித்தரவேண்டும். அன்புப் பெண்களும் இதையறிந்து இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும் நாளை நிச்சயம் கேள்விக்கேட்கப்படுவோம்.
அதற்கான கூலியை அடையப்பெறுவோம் .
அதனால் நல்லவற்றை கேட்டும். பார்த்தும். படித்தும்.
அறிந்துகொள்ளுங்கள்.
அப்படியில்லையாயின் நாளை நஷ்டவாளர்களில் நாமும் ஒருவராகிவிடுவோம். அப்படியொரு நிலை வராமல் நம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து நம்மை சுவர்கவாசிகளாக ஆக்குவானாக ஆமீன்...

எவர் ஒருவர் தொழுகையை பேணி அதன் பர்ளுகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் இறைவனின் நேசத்திற்க்குறியவர்கள்

எவர் ஒருவர் தொழுகையில் அலச்சியமுடனும் பிறர் பார்க்கிறார்கள் என்பதர்காகவும் தொழுகிறார்களோ அவர்கள் அவனின் வெருப்புக்குள்ளானவர்கள்.

நான் அனைத்தும் அறிந்தவளல்ல. அறிந்தவரை இதுதவறென்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இறைவனின்மேல் நேசம் வைத்ததால்
இதை என்மன வருத்துடன் எழுதுகிறேன்
பிறரின் மனம் வருந்துவதற்க்காக அல்ல
அப்படி என் எழுத்துக்களில் வருந்துபடியாக இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வசந்த காலத்தின் வாயிற்படி!

| | 4 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்!

நாம் நோன்பை நல்லமுறையில் கடைப்பிடித்தோமேயானால் அதன் கூலியை இம்மையிலும் மறுமையில் இறைவன் நமக்கு அளவில்லாமல் அள்ளித்தருவான்.
ஒவ்வொரு மனிதனும் வருடந்தோரும் அலுக்காமல் சலைக்காமல்,
 3 வேளையென்ன முடிந்தால் 6 வேளைகூட சாப்பிடக் கிடைத்தால் சாப்பிடுவான். சாப்பிடுகிறான்.

எதையுமே ஓர் வரையரை படுத்துவதில் இறைவனுக்கு நிகர் இறைவன் மட்டுமே! அதனால்தான் வருடத்தில் ஒருமாதமாவது தன்னை. தன் நாவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் தன் உள்ளத்தில் உண்டாகும் தீமைகளுக்கும் சேர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டி இன்நோன்பை ஏற்படுத்தி அவனை தூய்மைப்படுத்துகிறான்.

ஆகவே நோன்பு காலங்களில் நோன்பை மிகவும் கண்ணியத்தோடும். கடமையுணர்ச்சியோடும் கடைப்பிடியுங்கள். அதற்கான கூலையை இறைவன் ஈருலகிலும் வழங்குவான் இதில் சிறிதும் ஐயமில்லை.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உடல்ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தந்து அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக ஆமீன்.

கீழே படிக்கவிருக்கும் இந்த கட்டுரை எனக்கு மெயில் வந்தது படித்து பயன் பெறுங்கள்.

நோன்பு வசந்த காலத்தின் வாயிற்படி!


-டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம்.

ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை.

அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்.
ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான்.

அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு.

பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது.

இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது.

வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது.
அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும்.

பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும்.
வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும்.

வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்
தலைவலி :கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள்: தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை காப்பாற்றி சுவர்கத்தின் நறுமணத்தையும் அதனுள்ள என்றென்றும் தங்கியிருக்கும் நற்பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! ஆமீன்.

அன்புடன் மலிக்கா



இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே13 [சிறப்புமிகுந்த மாதம்]

| | 6 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகி இறைவனின் திருப்பெயரால்.


அன்புள்ள ஆன்மாவே!
இந்த அருமையான மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு
நன்மையின்பக்கம் செல்லவே முனையுங்கள்.
தங்களால் இயன்ற அளவு குர்ஆனை ஓதுங்கள்.
ஜக்காத்தை கொடுக்கங்கள்.
இரவிலும் பகலிலும்  இறைவனை இடைவிடாது வணங்குங்கள்
நன்மையை ஒன்றுக்கு பத்தாக. நூறாக. இறைவனிடம் பெறுங்கள்.

நம் இறைவன் நம்மை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். பாவத்தின் பக்கம் நெருங்காதீகள்.கண்ணியமிக்க இந்தமாதத்தின் பொருட்டால் நம் அனைவருக்கும் இறைவன் சுவர்க்கத்தை வழங்கி நம்மை நரகத்திலிருந்து பாதுக்காப்பானாக!

கீழேவரும் இந்த பகுதி எனக்கு மெயிலில் வந்தது.
 நான் அறிந்துகொண்டதை அனைவருக்கும் அறியத் தந்திருக்கிறேன்

குர்ஆன் அருள‌ப்ப‌ட்ட‌ மாத‌ம்:


ர‌ம‌ளான் மாத‌ம் எத்த‌கைய‌தென்றால் அதில் தான் ம‌னித‌ர்க‌ளுக்கு நேர்வ‌ழி காட்டியாக‌வும், இன்னும் நேர்வ‌ழியிலிருந்தும் (ச‌த்திய‌த்தையும் அச‌த்திய‌த்தையும்) பிரித்த‌றிவிக்க‌க் கூடிய‌திலிருந்தும் தெளிவான‌ விள‌க்க‌மாக‌வும் உள்ள‌ குர்ஆன் இற‌க்கிய‌ருள‌ப்ப‌ட்ட‌து; என‌வே எவ‌ர் உங்க‌ளில் அம்மாத‌த்தை அடைகிறாரோ அவ‌ர் அதில் நோன்பு நோற்க‌வும். குர் ஆன் (2;185)


குர்ஆன் ஓத‌வும் அத‌ன் பொருள் விள‌ங்கி ஆராய்ந்து பார்க்க‌வும் இறைவ‌ன் ம‌னித‌ ச‌முதாய‌த்திற்கு க‌ட்ட‌ளையிட்டுள்ளான். இத‌ன் மூல‌ம் ம‌னித‌னின் அறியாமை எனும் இருள் நீங்கி ச‌த்திய‌ம், நேர்வ‌ழி என்ற‌ ஒளியை பெற்றுக் கொள்கின்றான்.மேலும் குர்ஆனை யார் க‌ண்டு கொள்ள‌வில்லையோ,அவ‌ர்க‌ளைப் ப‌ற்றியும் இறைவ‌ன் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றான்
உங்க‌ள் இறைவ‌னிட‌மிருந்து (ச‌த்திய‌த்திற்குறிய‌) ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் உங்க‌ளிட‌ம் வ‌ந்திருக்கின்ற‌ன‌. எவ‌ன் (அவ‌ற்றைக் க‌வ‌னித்துப்) பார்க்கின்றானோ (அது) அவ‌னுக்கே ந‌ன்று. எவ‌ன் (அவ‌ற்றைப் பார்க்காது) க‌ண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவ‌னுக்கே கேடாகும். (ந‌பியே! நீங்க‌ள் அவ‌ர்க‌ளை நோக்கி) "நான் உங்க‌ளைப் பாதுகாப்ப‌வ‌ன் அல்ல‌" (என்று கூறுங்க‌ள்). குர்ஆன் (6;104)
குர்ஆனின் ஞான‌ம் ஒவ்வொரு த‌னி ம‌னித‌னின் உள்ள‌த்திலும் இருக்க‌ வேண்டும். அப்ப‌டி இல்லாத‌ உள்ள‌த்தை பாழ‌டைந்த‌ வீட்டிற்கு ஒப்பிட்டு ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறியுள்ளார்க‌ள்.
ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்ற‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்:"குர்ஆனிலிருந்து சிறிதள‌வு கூட‌ த‌ம் உள்ள‌த்தில் ம‌ன‌ன‌ம் இல்லாத‌வ‌ர் பாழ‌டைந்த‌ வீடு போன்ற‌வ‌ராவார். (திர்மிதி)

மேலும் ர‌ம‌ழான் மாத‌த்தில் திருக்குர்ஆனை அதிக‌ம் ஓத‌வும், தான‌ த‌ர்ம‌ங்க‌ளை அதிக‌ப்ப‌டுத்த‌வும் அண்ண‌ல் நபி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஆர்வ‌மூட்டியுள்ளார்க‌ள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளில் அதிகமாக‌க் கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ளைச் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் மிக‌ அதிக‌மாக‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ர‌ம‌ழானில் ஒவ்வொரு இர‌விலும் நாய‌க‌த்தைச் ச‌ந்திப்பார்க‌ள், குர்ஆனை அவ‌ர்க‌ளுக்கு ஓதிக்காண்பிப்பார்க‌ள். ஜிப்ரீல் ச‌ந்திக்கும் புனித‌ ர‌ம‌ழானில் வேக‌மாக‌ வீசும் காற்றை விட‌ அதிக‌மாகக்‌ கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். (புகாரி_முஸ்லிம்)

முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்
வ‌ஹி(இறைச்செய்தி)யின் துவ‌க்க‌ம்:
ம‌க‌த்துவ‌மிக்க‌ இந்த‌ மாதத்திலே தான் ம‌னித‌குல‌ம் பெருமையடையும் வ‌கையில் பல‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் நிக‌ழ்ந்த‌ன‌. வ‌ழிகேட்டிலிருந்து நேர்வ‌ழிக்கும், இருளிலிருந்து பேரொளிக்கும், இறைநிராக‌ரிப்பிலிருந்து ஈமானுக்கும் ம‌னித‌ ச‌முதாய‌த்தை திருப்பி இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் அவ‌ர்க‌ள் ஈடேற்ற‌ம் பெற‌க்கார‌ண‌மான‌ வ‌ஹியின் துவ‌க்க‌ம் புனித‌ ர‌ம‌ழானில் தான் ஆர‌ம்ப‌மான‌து.
புனித‌ ர‌ம‌ழான் மாத‌த்தில் ம‌க்காவிலுள்ள‌ ஹிரா குகையில் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை ஜிப்ரீல்(அலை) அவ‌ர்க‌ள் ச‌ந்தித்து இறைவ‌ன் அருளிய‌ திருக்குர்ஆனின்.....

1.(ந‌பியே!) உம்முடைய‌ ர‌ப்பின் திருப்பெய‌ரைக் கொண்டு
ஓதுவீராக‌! அவ‌ன் எத்த‌கைய‌வ‌னென்றால் . (அனைத்தையும்) ப‌டைத்த‌வ‌ன்.

2. ம‌னித‌ர்க‌ளை இர‌த்த‌க்க‌ட்டியிலிருந்து அவ‌ன் தான். ப‌டைத்தான்.

3. ஓதுவீராக‌! உம்முடைய‌ ர‌ப்பு மிக்க‌ த‌யாள‌மான‌வ‌ன்.

4. அவ‌னே எழுதுகோலைக் கொண்டு க‌ற்றுக்கொடுத்தான்.

5. ம‌னித‌னுக்கு அவ‌ன் அறியாத‌வ‌ற்றை(யெல்லாம்) அவ‌ன் . க‌ற்றுக்கொடுத்தான். குர்ஆன்(96;1 முத‌ல் 5)

என்ற‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதிக்காட்டினார்க‌ள். இத‌ற்குபின் இஸ்லா‌த்தின் ஏக‌த்துவ‌ப் பிர‌ச்சார‌ அழைப்பு ஆர‌ம்ப‌மான‌து. இந்நிக‌ழ்வு ந‌பித்துவ‌த்தின் முத‌லாம் ஆண்டு ர‌ம‌ழான்_17 அன்று (ஹிஜ்ர‌த்திற்கு 13 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், கி.பி.610 ஜூலை இல்) நிக‌ழ்ந்த‌து.

லைல‌த்துல் க‌த்ரு:
இம்மாத‌த்தில் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் தான் புனித‌ குர்ஆன் லவ்ஹுல் ம‌ஹ்ஃபூலிலிருந்து முத‌ல் வான‌த்திற்கு மொத்த‌மாக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து. பின் கால‌ச் சூழ்நிலைக‌ளுக்கு ஏற்ப‌ இருப‌த்து மூன்று வ‌ருட‌ங்க‌ளில் சிறிது சிறிதாக‌,முத‌ல் வான‌த்திலிருந்து ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளுக்கு ஜிப்ரீல்(அலை) மூல‌ம் அருள‌ப்ப‌ட்ட‌து.

"(லைல‌த்துல் க‌த்ரு என்னும்) க‌ண்ணிய‌மிக்க‌ இர‌வு ஆயிர‌ம் மாத‌ங்க‌ளை விட‌ மிக‌ச் சிற‌ந்த‌து" குர்ஆன் (97;3)

ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌வின்றதாக‌ ஹ‌ஜ்ர‌த் அபூஹுரைரா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: யார் லைல‌த்துல் க‌த்ரு இர‌வில் ஈமானுட‌ன் ந‌ற்கூலியை ஆத‌ர‌வு வைத்த‌வ‌ராக‌ நின்று வ‌ண‌ங்குகிறாரோ அவ‌ரின் முன் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌டும். (புகாரி, முஸ்லிம்)

க‌தீஜா(ர‌ழி)அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத்:
அன்னை க‌தீஜா(ர‌ழி) அவ‌ர்க‌ள், ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் ஏக‌த்துவ‌ அழைப்பை முத‌ன் முத‌லாக‌ ஏற்று ஈமான் கொண்டவ‌ர்க‌ளில் பெண்க‌ளில் முத‌லாம‌வ‌ர் ஆவார்க‌ள். அவ‌ர்க‌ளின் வ‌ஃபாத் ந‌பித்துவ‌த்தின் ப‌த்தாம் ஆண்டு (ஹிஜ்ர‌த்திற்கு மூன்று ஆண்டுக‌ளுக்கு முன்) ர‌ம‌ழான் மாத‌த்தில் நிக‌ழ்ந்த‌து.

ப‌த்ரு யுத்த‌ம்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ர‌மழான் பிறை 17 வெள்ளிக் கிழ‌மை ப‌த்ரு யுத்த‌ம் நிக‌ழ்ந்த‌து. இந்த‌ யுத்த‌தில் சிறிய‌ ப‌டையின‌ராக‌ இருந்த‌ முஸ்லிம்க‌ளுக்கு அல்லாஹ் உத‌வி செய்து வெற்றி பெற‌ச் செய்தான்.

"நீங்க‌ள் அல்ல‌ஹ்வைக் கொண்டும்,(ச‌த்திய‌த்திற்கும், அச‌த்திய‌த்திற்குமிடையே) தீர்ப்ப‌ளித்த‌ (ப‌த்ரு போரின்) நாளில்_ இரு ப‌டையின‌ர் ச‌ந்தித்துக் கொண்ட‌ நாளில்_ நம் அடியாரின் மீது நாம் இறக்கி வைத்த‌ (உத‌வி முத‌லிய‌)வ‌ற்றைக்கொண்டும் நீங்க‌ள் ஈமான் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால்(இத‌னை அறிந்து கொள்ளுங்க‌ள்); அல்லாஹ் எல்லாப் பொருட்க‌ளின் மீதும் ச‌க்தியுள்ள‌வ‌ன். (8;41)

ஜ‌காத்துல் ஃபித்ரு
ஜ‌காத்துல் ஃபித்ரு (ஸ‌த‌கத்துல் ஃபித்ரு) க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்ட‌தும், பெருநாள் தொழுகை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு ர‌ம‌ழானிலிருந்து தான்.

ம‌க்கா வெற்றி:
ம‌க்கா வெற்றி கொள்ள‌ப்ப‌ட்ட‌ நாள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, ர‌ம‌ழான் பிறை 21 (10_ ஜ‌ன‌வ‌ரி‍‍‍_630கி.பி)இல் நிக‌ழ்ந்த‌து.

இறை இல்ல‌ம் க‌ஃப‌துல்லாஹ்வில், சிலை வ‌ண‌க்க‌மும் இணை வைப்பும் ஒழிக்க‌ப்ப‌ட்டு க‌ஃபா ப‌ரிசுத்த‌மாக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் சிலை வ‌ண‌க்க‌ம், வேரோடும் வேர‌டி ம‌ண்ணோடும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ நாள். அல்லாஹ் த‌ன்னுடைய‌ மார்க்க‌த்தை‌ உய‌ர்வ‌டைய‌ச் செய்த நாள். அவ‌னுடைய‌ தூத‌ர் முஹ‌ம்மது(ஸ‌ல்) அவ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளுடைய‌ தோழ‌ர்க‌ளுக்கும், கூட்ட‌த்தின‌ர்க‌ளுக்கும்‌ வெற்றியை கொடுத்து க‌ண்ணிய‌ப்ப‌டுத்திய‌ நாள். இஸ்லாமிய‌ அழைப்புப் ப‌ணி உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌வ‌ கார‌ண‌மாக‌ விள‌ங்கிய‌ நாள்.
ஹ‌ம்ஜா இப்னு அப்துல்முத்த‌லிப்(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ந‌பி(ஸ‌ல்) அவர்க‌ள் ஹிஜ்ர‌த் செய்து ம‌தீனா சென்ற‌ ஏழாவ‌து மாத‌ம், ர‌ம‌ழானில் (கி.பி 622,ஏப்ர‌லில்) ஹ‌ம்ஜா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 முஹாஜிர்க‌ளைக் கொண்ட‌ ஒரு ப‌டைப்பிரிவை அமைத்து,முத‌ன் முத‌லாக‌ வெண்மை நிற‌க்கொடியையும் கொடுத்து, ஷாம் நாட்டிலிருந்து ம‌க்கா நோக்கிவ‌ரும் அபூஜ‌ஹ்லின் 300 பேர் கொண்ட‌ வியாபார‌க்குழுவை வ‌ழி ம‌றித்து தாக்குத‌ல் நாட‌த்த "ஸாஹிலுல் ப‌ஹ்ர்" என்ற‌ இட‌த்திற்கு அப்ப‌டையை அனுப்பி வைத்தார்க‌ள்.

ப‌னூ ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர்:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ப‌த்ரு யுத்த‌திலிருந்து திரும்பிய‌ பின் ஏழு நாட்க‌ள் க‌ழித்து ப‌னு ஸுலைம் குல‌த்த‌வ‌ருட‌ன் போர் நிக‌ழ்ந்த‌து. அக்கூட்ட‌த்தின‌ர் த‌ப்பி ஓடிவிட்ட‌ன‌ர். எதிரிக‌ளில் யாரும் கைது செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

ய‌ம‌ன் நாட்டுக்கு ப‌டை:
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ர‌ம‌ழானில்(கி.பி.631)அலி இப்னு அபூதாலிப்(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌ல‌மையில் ய‌ம‌ன் நாட்டுக்கு ஒரு ப‌டைப்பிரிவு சென்றார்க‌ள்.
ஜைது இப்னு ஹாரிஸா(ர‌ழி) ப‌டைப்பிரிவு:

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரமழானில் (கி.பி.628) ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவு ’உம்மு கிர்ஃபா’ என்னும் பெண்ணைப் பிடிக்கச் சென்றார்கள். இவள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்ய 30வீரர்களை தயார் செய்துவைத்திருந்தாள். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அத்தீயவளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டது.

ஃபாத்திமா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமழானில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்
அலி(ரழி) அவர்களின் வீரமரணம்:

ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு ரமழான் 17வது நாள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வந்த அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களை, காரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்பவன் கொலைசெய்ததால் அன்னார் (ஷஹீத்) வீரமரணமடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 63 ஆகும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபாவாக நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஆறு நாட்கள் சிறப்பாகஆட்சி செய்துள்ளார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 58ஆம் ஆண்டு ரமழானில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்

தீமைகளிலிருந்து எங்களை காப்பாற்றி
நன்மைகளின் பக்கம் எங்கள் முகங்களையும்
எங்கள் மனங்களையும் திருப்புவாயாக!..


அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே!12 [பிறருக்காக வாழ்வதா?]

| | 10 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரைக்கொண்டு ஆரம்பிக்கிறேன்

அன்புள்ள ஆன்மாவே இன்று
முகஸ்துதியை [பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக வாழ்வதைப்] பற்றி அறிந்ததை அறியத்தர வந்துள்ளேன்

36;அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும்,பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும், நன்மை செய்யுங்கள் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

37.தாமும் கஞ்சத்தனம் செய்து. மக்களையும் கஞ்சத்தனம் செய்யதூண்டி,அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள அருளை யார் மறைக்கிறார்களோ அத்தகைய மறுப்போருக்கு இழிபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

38; இறைவனையும் இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் [ஷைத்தானின் நண்பர்கள்] யாருக்கு ஷைத்தான் நண்பனாகிவிட்டானோ அவனே கெட்டவன்.
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா

47.தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்கு காட்டவும் புறப்பட்டோரைப்போன்றும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் [மக்களை]தடுத்தோரைப்போன்றும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் செய்தவற்றை அல்லாஹ் முழுமையாக அறிவான்.
அல்குர்ஆன் பாகம்10: 8.அல் அன்ஃபால்:

146 .மன்னிப்புக் கேட்டுத்திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிபிடிதுக்கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்குமட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர, அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள்.
நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் பாகம் 5: 4.அன்னிஸா.

ஆன்மாவே! உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் வரையரைக்குள் வாழப்பழகிக்கொள்.  இறைவனுக்கு பயந்துநட.
அவன் சொல்லாத ஒன்றை மனிதருக்காச்செய்யாதே! நாளை நற்க்கூலி வழங்குபவன் மனிதனல்ல இறைவனே!
தன்னிடமுள்ளவைகளை பிறருக்காக பிறரின் பார்வைக்காக செலவிடுவதும் அல்லது செலவிடுவதுபோல் நடிப்பதும் பாவமே!

தாம் செய்யாத ஒன்றை தானே செய்ததாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்,
தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டுவதும். அல்லது தம்மிடமுள்ளைவகளை மறைத்து பிறர் முன்னிலையில் இல்லாதாவரைபோல் போலியாய் கஞ்சனாய் வாழ்வதும். பாவமே!
பெருமையடித்துக்கொள்வதும், கஞ்சத்தனம் செய்வதும், மக கெட்டகுணம். பிறர் முன்னிலையில் ஆகோ ஓகோவென பேசிவிட்டு பின்னால்போய் அதற்கு நேர்மாராய் நடப்பது மனிதனுக்கு அழகா!

பிறரின் வஞ்சப்புகழ்ச்சிக்காக நடப்பது அந்நிமிடம், அல்லது அன்றைய பொழுது, அல்லது அதற்கான அவகாசம் வரும்வரையே! அந்தபுகழும், புகழ்ச்சியும் இருக்கும்.ஆனால் அதற்கு இறைவனிடம் தண்டனையுண்டு.இவ்வுலக்கில இழிவுமுண்டு.
அதே இறைவனின் ஆணைகளை ஏற்று அவனின் சொல்செயற்ப்படி நடக்கும்போது வந்துசேரும் புகழும் புகழ்ச்சியும் நீடித்து நிலைக்கும். இறைவனிடமும் மகத்தான கூலிகிடைக்கும். வேசமிட்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா! பிறர்புகழவேண்டுமென நம்மைநாமே இகழ்ந்துக்கொள்வது தேவையா?

முகஸ்துதிக்காக வாழும் வாழ்க்கையில் திருப்தியிருக்குமா! 5,க்கு வாங்கிவிட்டு 500 என்பதும்.அடுத்தவர் மெச்சவேண்டுமென்பதற்காக அளவுக்கதிகமாய் தம்மையே வதைப்படுதிக்கொள்வதும்.தேவையா?
நமக்கென்று என்ன எழுதியிருக்கோ அதன்படியே நடக்கும்.
ஷைத்தானின் தூண்டுதலின்பேரில் தன்னை பிறருக்காக தன்னையறியாது துன்புறுத்திக்கொள்வது முட்டாள்தனமில்லையா?
அளவுக்குமீறி சொத்தை வைத்துக்கொண்டு அடுதவர் சிரமப்படுவதைக்கண்டும் அரைகாசு கொடுக்காமல் அடுக்கிவைப்பது அரக்கத்தனமில்லையா!

ஆன்மாவே நீ நீயாகவே இரு. நீயாகவே வாழு!
பிறரின் வஞ்சப்புகழ்சிக்காக உன் நெஞ்சத்தை வஞ்சித்துவிடாதே!உன்
ஆன்மாவை அன்றைய அர்ப்பத்திற்க்காக ஆட்டிவைக்காதே!
பிறரின் புகழ்ச்சி வற்றிடும் குட்டைநீர் அல்லது கண்ணெதிரே தெரியும் கானல்நீர். அதைகண்டு அள்ளிக்குடிக்க அலறியடித்து ஓடாதே! அங்கே சென்றதும் அரண்டு நிற்பாய் அர்பமானதைக்கண்டு.
கஞ்சத்தனமும் முகஸ்துதியும். உன்னை அவதிக்குள்ளாமே தவிர ஆனந்தப்படவைக்காது.

ஆண்டவனில் சொல்கேட்டு அவன் வகுத்து வைத்த வரையரைக்குள் வாழந்துபார் வாழ்க்கையின் உன்னதம் உனக்கேப்புரியும்...

இன்று முகஸ்துதியைப் பற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

"உறவினர்களை நேசியுங்கள்”

| | 10 comments

بسم الله الرحمن الرحيم

இது என்னுடைய ஆக்கமல்ல!

இந்த அருமையான ”உறவினர்களை பேணுதல், நேசித்தல்” என்னும் உரை எனக்கு மெயில் வந்தது நான் படித்தால் மட்டும்போதாது மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இதில் பதிகிறேன்.


"உறவினர்களை நேசித்தல்"
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !

இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )

"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன் கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)

அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).

தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).

அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).

உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)

உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாக அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால் நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள் சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள் விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள் எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)

அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாக அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!
-------------------------------------------------------------------------------------------------------------
தகவல்: அவ்காஃப் - U.A.E.
18.06.2010 வெள்ளிக்கிழ‌மை அன்று துபாய் ப‌ள்ளிக‌ளில் ஜும் ஆ தொழுகையின் போது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ குத்பா உரையின் த‌மிழாக்க‌ம்

த‌மிழாக்க‌ம் :
மௌல‌வி காய‌ல் முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ம் துபாய்
050 20 19 105

( மொழியாக்கம்: காய‌ல் சுலைமான் ஆலிம்
இமாம் ETA Ascon & Star Group - Dubai )

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே! 11. தடுக்கப்பட்ட பொருளாதாரம்

| | 11 comments

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...

அன்புள்ள ஆன்மாவே!
இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

லஞ்சம்

62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும்,
தடுக்கப்பட்டதை உண்பதற்க்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் அல்மாயிதா பாகம்: 6

188 உங்களுகிடையே [ஒருவருக்கொருவர்] உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்துகொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.
அல்குர்ஆன். 2 அல்பகரா   பாகம்:2

எதற்கெடுத்தாலும் எந்த வேலைகளுக்கும் லஞ்சம் லஞ்சம்.
பிறப்புமுதல் இறப்புவரை அத்தனைக்கும் லஞ்சம்.
உயிர் வெளியாகும் சமயதிலிருந்து. உயிர்போகும் நிலையில்கூட லஞ்சம். கள்ளத்தனமாக கொடுக்கப்படுவதும். அதையே மறைத்து அன்பளிப்பென்றயரில் கொடுப்பதும். அனைத்தும் பிறரை வதைத்து தான் வாழ வாங்கும் லஞ்சம். தனக்காவது நிலைக்குமா! அல்லது தன்னையாவது நிம்மதியாய் வாழவிடுமா! என்றால் இல்லை இல்லவேயில்லை. எல்லாம் தெரிந்தும் மனிதன் தன் மனஆசைக்கு கட்டுப்பட்டு மதியிழக்கிறான்...

அனாதைகளின் சொத்தை அபகரிப்பது

2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்[அவர்களின் சொத்துக்களில்] நல்லதை [உங்களிடம் உள்ள] கெட்டதற்கு பகரமாக மாற்றிவிடாதீர்கள்!
அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது.
அல்குர்ஆன் 4. அன்னிஸா பாகம் 4

10.அனாதைகளின் சொத்துக்களை
அநியாயமாக உண்போர் தனது
வயிறுகளில் நெருப்பயே உண்ணுகின்றனர்.
நரகில் அவர்கள் நுழைவார்கள்.
அல்குர்ஆன் 4.அன்னிஸா பாகம்: 4

அனாதைகளின் சொத்துக்களை சூரையாடுவதும்
அவர்களுக்கு துரோகம் செய்தும். அதனை தான்மட்டும் அனுபவிக்க நினைப்பதும்..
அடுத்தவர்களின் அமானிதத்தை. அதாவது தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருளை. அவர் அறிந்தோ அறியாமலோ அவருக்கு துரோகம் செய்துவது மகாபாவம்.
நம்மிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும்.
பிறரை ஏமாற்றி தானும் தன் வம்சமும் வாழநினைப்பது குற்றமில்லையா!. இங்கும் மனஇச்சை மனிதனை வென்று மதிகெடுக்கிறது.


அளவு நிறுவையில் மோசடி.

161 மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தபொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும், அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட மாட்டார்கள்..
அல்குர்ஆன் 3. ஆலு இம்ரான் பாகம்:4


என் சமுதாயமே! அளவையும் நிறுவையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்துவிடாதீகள்!
இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீகள்!”
அல்குர்ஆன் 11. ஹூது பாகம்:12


ஐந்து பைசாவுக்கு பொருள் வாங்கினாலும் ஐநூறு ரூபாய்க்கு பொருள்வாங்கினாலும் அதில் மோசடி செய்வது குற்றமே!
அளவு நிறுவைகளில் கவனமாக இருத்தல் வேண்டும். பிறர் பாடுபட்டு சம்பாத்தித்து அதில் பொருள்வாங்க வந்திருக்கும்போது
அவரறியாமல் அவரின் பொருளை குறைத்துகொடுத்து பணத்தை கூடுதல் பெறுவது நியாயமா! இங்கும் மிதம்மீறிய ஆசை மனிதனின் மதியைக் கெடுக்கிறது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைத்தும். வருத்தியும். மோசடி செய்தும். ஏமாற்றியும். துரோகம் செய்தும். குற்றத்திலும் பெரும்குற்றம்.

பூமியில் வந்திருக்கும் நாம். சிலகாலம்தான் வாழப்போகிறோம் மரணத்தை மடியில் கட்டியிருக்கும்போதே தன்மன இச்சைக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வாழ்ந்தோமேயானால். தான்மட்டும் வாழவேண்டுமென நினைத்தோமேயானால்! நாம் பிறந்ததிற்கான பலந்தான் என்ன?
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றிருப்பது வாழ்க்கையா! பிறரையும் வாழவைத்து தானும் வாழ்வது வாழ்க்கையா?

மனசாட்சியோடு வாழ்ந்துபாருங்கள்.
வாழும்போதும் வாழ்க்கைக்கும் பிறகும்.
சிறப்பானதையே பெருவீர்கள்..


இன்று மனசாட்சியோடு வாழ்வதைப் பற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

 இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே!-10 வாழ்வையே! கெடுக்கும் வட்டி

| | 15 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ள ஆன்மாவே!

இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.
[நன்றி கூகிள்]
275. வட்டியை உண்போர்[மறுமையில்நாளில்] பைத்தியமாகவே எழுப்பபடுவார்கள். ”வியாபாரம் வட்டியைப்போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம் .
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான்.
தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்தபின் விலகிக்கொள்பவருக்கு முன்சென்றது உரியது.
அவரைப்பற்றிய முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 2அல்பகரா: பாகம் 3]


276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.
நன்றிகெட்ட எந்த பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]


278. நம்பிக்கைகொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]

280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கவேண்டும்.நீங்கள் அறிந்துகொண்டால் அதை தர்மமாக்கிவிடுவது உங்களுக்கு சிறந்தது.
[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]


281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக்கொண்டுவரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.


[அல்குஆன் 2அல்பகரா:: பாகம்3]

அன்புள்ள ஆன்மாவே
மனிதன் ஆசைகளின் பக்கம் அடித்துச்செல்லப்படுகிறான்.அது அளவுகடக்கும்போது அவதிக்குள்ளாகிறான்.
தன் தேவைகளளுக்குமீறிய எண்ணங்களை ஆசைகளாக்கி, அதை அடைய நினைக்கும்போது அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கமுடியாமல் திணறி திண்டாட்டம் காண்கிறான். அதனை பயன்பயடுத்தும் மற்றவன் அவனை தன்வசம் நன்றாக வசிப்படுதிக்கொள்கிறான். அதனால் அவன் பலனடைகிறான். வசமானவனோ மொத்த பலமும் இழக்கிறான்.

எங்கு நோக்கினும் வட்டி வட்டி. வித விதமாய். ரகம் ரகமாய்.
பலபெயர்களில். புதுவித பரிணாமங்களில்.
கேட்டால் பிசினஸ். இதுவும் ஒருவகை வருமானம்.
எது வருமானம்?.
பிறரின் முதுகின்மீது சவாரி செய்து தான் பலன் அடைவதா?
மற்றவனின் மானத்தைப்பறித்து.இவன் மானத்தைகாப்பாற்றுவதா? பிறரை பட்டினிபோட்டு இவன் வயிறுநிறைய உண்பதா?
பிறரின் வயிறெரிய இவன் குளிர்காய்வதா?
இல்லையில்லை
பிறரின் உயிரைக்கொண்டு. இவன் உயிர் வாழ்வதா?
எது வருமானம். எது பிசினஸ்?

மனிதனின் போக்கே மிக வித்தியாசமானதாகிவருகிறது.
அது படித்திருந்தாலென்ன படிக்காதிருந்தாலென்ன. மொத்தத்தில் மனிதன் மனிதனை சாப்பிடும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டான் என்றால் அதுமிகையாது. ஒருவனின் வறுமையின் நெருப்பை பயன்படுத்தி மற்றவன் குளிர்காய்கிறான்.
ஒருவன் வறுமைபடாதிருக்க இருக்கும் ஒற்றை ரூபாயை உழைக்காமலே ஒருகோடி ஆக்க நினைக்கிறான்.அப்படி நினைக்கும்போது அதை தெரிந்துகொண்டமற்றவன் அந்த ஒற்றை ரூபாயையும் அவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் அபகரித்துவிடுகிறான்.

இன்று எத்தனை எத்தனை பைனாஸ்கம்பேனி. சீட்டுக்கம்பேனி. ஒன்றுக்கு நூறாக அதிகம் அள்ளித் தருகிறோம் என்று விதவிதமாக ஏமாற்றும் திட்டங்கள். வியாபரத்தில் போட்டு லாபம்தருகிறோம் என்றபோர்வையில் மோசடி. இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம் எத்தனைவிதங்களில் ஏமாற்றமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாளும் திறனோடு களம் இறங்குபவர்கள்.தங்களின் கைவரிசையை காட்டியவுடன் கம்பி நீட்டிவிடுகிறார்கள்.

அவர்களைகுறை சொல்லி என்னலாபம். இது யாருடைய குற்றம்.
பளபளப்பக்கும் உடையுடம், பகட்டான பேச்சுக்களைக் கண்டும். ஆசைகளைத்தூண்டும் அடுக்கடுக்கான பொய்களைநம்பியும். இருக்கும் பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து ஏமாறும்கூட்டத்தை என்னெவென்று சொல்வது.
ஆசையிலும் ஆசை பேராசையென்பதா?
பணத்தாசையின்மீது மோகமென்பதா?
இல்லை உழைக்காமலே கிடைக்கும் ஊதியத்தை உக்கார்ந்து சாப்பிட போட்டிப்போட்டுக்கொண்டு இருப்பதையும் இழந்துநிற்கும் மடையர்களென்பதா?

ஒன்றை ரூபாய்க்கு ஒருவன் நூறாக தருகிறேன் எனும்போது அதன் உள்ளர்த்தம் விளங்கவேண்டாமா?
இன்று உன்னிடம் இப்படிச்சொல்லி வாங்கியவன் நேற்று எப்படிச்சொல்லி யாரை ஏமாற்றி அதன் பணத்தை உனக்குத்தருகிறான் என்பதை சிந்திக்கவேண்டாமா?
ஒற்றை ரூபாய்க்கு உனக்கே இத்தனை தருகிறேன் என்பவன் அவனுக்கு எத்தனை எடுத்துக்கொள்வான் என்பதை உணரவேண்டாமா?

வட்டி வட்டிக்குவட்டி இதனால் எத்தனைகுடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது.
எத்தனை குடும்பங்கள் தற்கொலையில் தனுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறது.
எத்தனைக் குடும்பம் தன் வாழ்க்கையையே அழங்கோலப்படுத்திக்கொண்டிருக்கிறது. எத்தனைக் குடும்பங்கள்.நடுத்தெருக்கு அதுவும் நேற்று கோடிஸ்வரனாகயிருந்தவனை இன்று பிச்சையெடுக்கும் அளவுக்கு வந்து நிப்பாட்டியிருக்கிறது.
இது எதனால் சிந்திக்கமாட்டார்களா?
எத்தனைமுறை பட்டாலும் புத்திபெறமாட்டாகளா?
இன்று ஒருபெயரில் ஏமாற்றியவன் நாளை வேறு பெயர்வைத்துவந்தாலும்.எளிதில் ஏமாந்துவிடுகிறார்களே ஏன்?

ஆன்மாவே! இதெல்லாம் எதனால்?
ஆசை ஆசை அளவுக்குமீறிய ஆசை. உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து சாப்பிட ஆசை. ஊரானின் வயிற்றில் அடித்து இவன் முன்னேற ஆசை.பலபேர் வயிறெரிய அதில்வரும் பணத்தில் இவன் பந்திபோட ஆசை.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிததேகத்தை உயிரோடு இருக்கும்போதே பிச்சி தின்னும் கொடூர ஆசை.

பிணந்தின்னும் கழுகுகூட இறந்த மனிதனின் உடலைத்தான் கொத்தித்திக்கிறது. ஆனால்
வட்டிவாங்கும் மனிதனோ இருக்கும் மனிதனை உயிரோடு கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் குடிக்கிறான்.பின்பு மொத்தமாய் உயிரை எடுக்கிறான்.
மனசாட்சியை கொன்றுவிடுகிறான் மனிதாபிமானத்தோடு மல்லுக்குநிற்கிறான். மொத்தத்தில் அவன் மனிதன் என்பதை மறந்துபோகிறான். மிருகம் என்னும் சொல்லுக்கும் லாயக்கில்லாதவனாகிறான்.

வட்டிவாங்குபனைபார் ஒருபோதும் அவன் நிம்மதியாகவே இருக்கமாட்டான் இருப்பதாய் நடிப்பான். கொடுத்தவனும் அப்படியே! அவன் அதிகம் வைத்திருப்பதால் .இவன் இருந்ததையும் இழந்திருப்பதால்,,


கஷ்டப்படுவோருக்காக அழகியமுறையில் கடன்கொடுங்கள்.
அவனுக்கு திருப்பிதரும் நிலை திரும்பாமலே போய்விடுமாயின். அந்தகடனை இறைவனுக்காக விட்டுக்கொடுங்கள். அது உங்களின் தருமத்திற்கான நன்மைகளை பலமடங்கு கூட்டித்தரும்.

ஒருவன் நஷ்டப்படு நிற்கும்போது தன்னால் முடிந்த அளவு உதவிசெய்யுங்கள். அதையும் கடனாகவே செய்யுங்கள். அப்படிச்செய்யும்போது அவன், தானும் வாழனும். தனக்கு உதவியர்களுக்கு திருப்பி கொடுக்கனும் என்றநோக்கோடு செயல்படுவான். உழைத்துவாழ முன்வருவான்.
இன்று நீங்கள் கொடுக்கும் கடன் எதையும் எதிர்பாராமல் கொடுக்கும் கடன் நாளை உங்களுக்கு பலமடங்கு நன்மையாய் பெருக்கித்தருவான் இறைவன்.

சற்றேனும் மனசாட்சியோடு செயல்படுங்கள். உங்கள் செயலால் பிறரின் மனம் வருந்தும்படியோ வருத்தப்படும்படியோ. உங்களால் ஒரு ஜீவன் வாழ்விழப்பதையோ. அல்லது உயிரையே இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
நாளை நிச்சியம் கேள்விகேட்க்கப்படுவீர்கள். இதே நிலை நாளை உங்களை வந்தடையலாம் எச்சரிக்கையோடுயிருங்கள்.
ஏனென்றால் உலகம் உருண்டை இன்று அவன், நாளை நான், மறுநாள் நீ. என ஒவ்வொன்றும் சுற்றிச் சுற்றியேவரும்.

ஆகவே மனிதர்களே. வட்டியென்னும் கொடுமையை நீங்கள் செய்யாதீகள். வட்டிவாங்குவதும். வட்டிக்கொடுப்பதும் வட்டிக்காக சாட்சிகையெழுப்போடுவதும். வட்டிக்காக எழுதுவதும். அனைத்திற்கும் ஒரே தீர்ப்புதான் அது நரகம்தான்.
வட்டி தீமையிலும் மகாதீமை. வட்டி எப்படி உயிரோடுள்ளவனை வதைக்கிறதோ! கஷ்டப்படச்செய்கிறதோ!. பாழுங்கிணற்றில் தள்ளுகிறதோ! அதைவிட அதைவிட மிகக்கொடுமையானது அதற்கான தண்டனை அதை சிலர் இவ்வுலகிலும்காண்பார். சில மறு உலகிலும்காண்பார். ஆனால் இப்போதெல்லாம் கண்கூடாகவே காணும் அதிர்வை இறைவன் தந்துவிடுகிறான்.

அதனால் ஆன்மாக்களே!
 மாபெரும் தண்டையெனத்தெரிந்தும் ஒரு தவறை செய்ய நினைக்காதீகள். அதிலிருந்து விலகியிருங்கள். இறைவனின் கட்டளைக்களுக்கு கட்டுப்பட்டிருங்கள். அவனின் கோபத்திருந்து தப்பிவிடுங்கள்.
வாழும்நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவை எப்போது நிறுத்தப்படுதோ அன்றே முடிவடைத்துவிடும் வாழ்நாள்.

ஆதலால் வாழும்வரை மனிதராய்,
மனிதமுள்ள மனிதராய். மனசாட்சியுள்ள மனிதராய்.
மனிதாபிமான மனிதராய் சற்றேனும் இரக்கமுள்ள மனிதராய்.
வாழ்த்து செல்ல உங்கள் வாழ்க்கைப்பாதையை வழிவகுத்துக்கொள்ளுங்கள். நிச்சியம் ஈருலகிலும் நன்மையை பெருவீர்கள். வெற்றிகொள்வீர்கள்.. ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!


இன்று வாழ்வையே சீரழிக்கும் வட்டியைபற்றி
அறியத்தந்த இறைவன்.

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் மாபெரும்தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

ஆடம்பரத்தால் ஆவது????

| | 31 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
.
15-உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைக்கற்ப்பிக்கும்படி உன்னைக்கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுப்படாதே!
இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமைகொள் என்னை நோக்கி திரும்பியோரின் வழியைபின்பற்று!
பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது.
நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்..

17-எனது அருமை மகனே!
தொழுகையை நிலைநாட்டு!
நன்மையை ஏவு! தீமையை தடு! உனக்கு ஏற்படுவதை சகித்துக்கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

27-வீண் விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் பாகம்:15    17.பனூ இஸ்ராயில்

29-நம்பிக்கைக்கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு
நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
அல்குர்ஆன் பாகம்:13     13.அர்ரஃது

ஒரு குழந்தை பிறந்ததும் அதை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும்.தைரியத்துடனும் வளர்க்கவேண்டியது பெற்றோரின்
முக்கிய கடமை!

ஏதோ பெற்றுவிட்டோம் வளர்த்துவிட்டோம் கடமைமுடிந்தது என நினைப்பது பெற்றோர்களின் நல்ல குணமல்ல. குழந்தை ஒவ்வொரு செயல்களிலும் பெற்றொர்களின் பங்கு நிச்சயம் பூர்த்தியாக இருக்கவேண்டும்.

வளரும் சூழ்நிலையில் குழந்தைக்கு தானே தன்னை பாதுகாத்துக்கொள்வதையும் தன்னால் பிறரை பார்த்துக்கொள்வதையும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலும் தூண்டுகோலாக இருக்கவேண்டும். முக்கியமாக ஆண்குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது பொறுப்புகள் அவர்களின் தலையில் தானாகவே வந்துவிழும் அதை சமாளிக்கும் திறனை வளர்த்துவிடவேண்டும். சோதனைகள் வரும்போது அதை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்கிவிடவேண்டும்.

ஆண் வளரும்போது சுமைகளும் வளர்கிறது. பள்ளியில் புத்தகச்சுமை. கல்லூரியில் காதல் சுமை. படிப்புசுமை.அதுமுடிந்ததும் வேலைதேடும் சுமை. வேலைகிடைத்திலிருந்து குடும்பச்சுமை. அடுத்து திருமணச் சுமை அடுத்து தன்குடும்பச்சுமை. குழந்தைகள் சுமை என சுமைகளின் பயணம் அவனை தொடர்ந்துகொண்டேயிருக்கும் அத்தனை சுமைக்கும் அவன் ஈடுகொடுக்க பணச்சுமையைத்தேடி ஓடனும். அதாவது ஓடி ஓடி உழைக்கனும்..அதுவும் கல்யாணமாகிவிட்டால் அப்பப்பா கேக்கவேவேணாம் மத்தளம்தான்.
அவனைகண்போல் காத்து வளர்க்கும் பெற்றோர் அவனுக்கு கல்யாணம் ஆனதும் கலங்கவைத்துபார்ப்பதுதான் விந்தை..

பெண்குழந்தை பிறந்தால் வருத்தப்படும் உலகம்.ஆண்குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுகிறது ஏன்? இதையறிந்தால் ஆண் மிகவும் வருந்துவான்
தான் எத்தனை சுமைகளை சுமந்துகொள்ளவேண்டும் என்பதை நினைத்து?[சுகமான சுமையென்பது வேறு. அதுவே சுமையிலும் சுமையாகிப்போனால்?] வளர்த்து ஆளாக்கி பணம் சம்பாதிக்கும் நேரத்தில்
பொதிசுமப்பது போலாகிவிடுகிறார்கள்.
அவனை படிக்கவைத்தோம் அதற்காக எவ்வளவு பாடுபட்டோம் அதனால் அவனும் பாடுபட்டுதான் எங்களை பார்த்துக்கொள்ளனும் என்பது சரியே! அதற்காக
நாம் ஆடம்பர வாழ்க்கை வாழவும்! ஊருக்காக பெயருக்காக வாழவும்! அவன் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பபை வீணடிக்கலாமா? அவன் முதுகிலேயே முழுபாரத்தையும் சுமத்தலாமா?

நிறைய இடங்களில் இப்படிதான் நடக்கிறது. நாம் பூமி வந்த நோக்கமென்ன என்பதையே மறந்து. மற்றவர்களுக்காக நம்மை நாமே மாற்றி. மாறுவேசம்போட்டு அவர் செய்யும்போது நாம செய்யாமலிருந்தால் நம்ம அந்தஸ்து என்னாவது என கடனை உடனைவாங்கி ஆடம்பரத்தில்
ஆட்டம் ஆடிவிட்டு. ஆடிமுடியும்போது அன்றாட வாழ்க்கையே ஆட்டம்கண்டிருப்பதை அறிந்ததும் அழுது புலம்பியென்ன லாபம்?

வெளிநாடு போய்விட்டால் என்னவோ அங்கு ரோட்டில் கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளிஅனுப்பியதுபோல் சிலவுசெய்யும் தாய்தந்தையரும் சரி மனைவிமக்களும்சரி. அதை அங்கு எப்படி சம்பாதிக்கிறான் எந்தளவு கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் அறியமறுக்கிறார்கள்.
அவர்களுக்குவேண்டியெதெல்லாம் அடுத்தவர்கள் நம்மை தாழ்வாக நினைக்கக்கூடாது. அங்கு என்ன கஷ்டப்பட்டலென்ன? கடனைவாங்கியனுப்பினாலென்ன?. வட்டிக்குமேல் வட்டியானாலென்ன?
நாம்நினைத்தது நடந்தால் போதும்.

இதற்கு வழிகாட்டியார்? தாய் தந்தையா? அல்லது மனைவி மக்களா?
இல்லை ஊர் உலகமா? இல்லை நீங்களேவா? ஏனென்றால் நீங்கள் படும் கஷ்டங்களை மறைத்து பெருமையாக காட்டிக்கொள்ளும்போது அங்கிருப்பவர்களுக்கு அது புரியாதே? அதை உணர்த்தவறுவது உங்கள் தவறில்லையா? தவறை நீங்கள் செய்துவிட்டு பின் கஷ்டங்கள் வரும்போது அவர்களைகுறைசொல்லி லாபமில்லையே! சரி அது எதுவென்றபோதும் நாம் நம்மை சரிசெய்துகொள்ளவேண்டாமா? நம்மால் இதைதான் செய்யமுடியும் என எதற்கும் ஓர் வரையரை வகுத்துக்கொள்ளுதல் வேண்டாமா? நம் சக்திக்கு மீறி எதைசெய்தாலும் அது நம்மை பாதிக்கும் என்ற எண்ணம்
கொள்ளவேண்டாமா? ஆடம்பரத்தின்பின்னே போனால் அதனால் பின்பு கஷ்டப்படுவது யார்?சிந்திக்கவேண்டாமா?

நம் தாயாகட்டும் தந்தையாகட்டும் நம் மனைவியாகட்டும் மக்களாகட்டும்.
அவர்கள் சொல்லும் சொல்லிலோ செயலிலோ இறைவனின் வாக்குகளைமீறி
இறைவேதம் சொன்ன வழிகளைமீறி உலகவாழ்க்கைக்காக தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் அதுவும் அடுதவர்களுக்காக என நினைத்தால் அதை தடுத்துவிடுங்கள். நீங்களும் தவிர்ந்துக்கொள்ளுங்கள். இன்று அடுதவர்களுக்காக! ஊர் உலகத்துக்காக! இருக்கும் பணத்தையோ இல்லை அதற்க்குமீறி கடனை வாங்கியோ சிலவுசெய்து ஆடம்பரவாழ்க்கை வாழ்துவிட்டால்! நாளை சிரமமும் கஷ்டமும் சேர்ந்து வந்து உங்களை உலுக்கி எடுக்கும்போது.

அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.

விரலுக்கு தகுந்தார்போல் வீங்கினால்தானே வலி பொறுக்கமுடியும் அதற்குமேல்போனால் அல்லல்படவும் அவதிபடவும்தானே கூடும்.
நேரான வழியில் வரும் செல்வத்தை சீக்கிரம் சேமித்துக்கொள். அதை சிறுகச்சிறுக சிலவுசெய்யப்பழகு.

அதற்காக கருமித்தனமோ கஞ்சத்தனமோ செய்யாதே! எதையும் ஒரு எல்லைக்குள் உன் சக்திக்குள் செய்து வாழப்பார். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையில் இல்லை இன்பம்
நமக்கா நாம் வாழும் வாழ்க்கையிலேயேதான் மகிழ்ச்சி தங்கும்
அதுவே உன் வாழ்கையை நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்,
உங்களைச் செல்வச்செழிப்போடு வாழ்நாள்முழுவதும் வாழச்செய்யும்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வது மிகச்சுலபம், ஆனால் அதன்பின்னால் வரும் ஆபத்துகளை சமாளிப்பது மிக மிககடினம். ஆபத்து அழிவிலும் கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே எதையும் அளவோடு. நமக்காக நாம் வாழபழகிக்கொள்ளவேண்டும் அடுத்தவர்களுக்காக வாழ்ந்தால் அது நம் வாழ்க்கையல்ல.பிறர் மத்தியில் நாம் உயர்வாக இருக்க்வேண்டுமென்று எண்ணி இருப்பதையும் இழந்துவிடும் நிலையை தவிர்ந்துவிட்டு,
 நம் எண்ணங்களை உயர்ந்ததாக சிறந்ததாக்கி கொள்ளவேண்டும். அதுவே நமக்கு நல்லவைகளை தானே கொண்டுவந்து சேர்க்கும் நம்மை உயர்த்தும்..

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே!-9 இல்லறமே நல்லறம்!

| | 18 comments

بسم الله الرحمن الرحيم


திருமணம் தாம்பத்தியம்.[குடும்பவாழ்க்கை]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]

74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]

223: உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்
உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
உங்களுக்காக[நல்லறங்களை] முற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அவனை சந்திக்கவுள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
நம்பிக்கைக் கொண்டோருக்கு நற்ச்செய்தி கூறுவீராக!
[அல்குர்ஆன் பாகம்:2 அல் பகரா]

ஆன்மாவே!

திருமணமென்பதும் தாம்பத்தியம் என்பதும்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதார இணைந்து உடலால் ஒன்றுகூடி இவ்வுலக வாழ்க்கையை நிறைவடைச்செய்வதும், தம் மூலம் வாரிசுகளை உருவாக்கி அவர்களையும் நல்வழியில் நடத்திச்செல்வதே!

தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும்

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.

திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.
மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்.
அவைகள்தான் தான் இஷ்டப்பட்ட ஒன்றிடம் என்நேரமும் கூடிக்கொள்ளும் அவைகள் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மற்றவைகளைவிட மனிதனை உயர்ந்தவன். சிறப்பனவன் என்பதற்கு இதைவிட சாட்சிவேண்டுமா.

ஆன்மாவே!
இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணம் திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட
தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.
மதியையும் இழந்து மனக்கட்டுப்பாட்டையும் இழந்து மனம்போனபோக்கில் வாழநினைக்கிறார்கள்
துறவரம் என்றெபயரில் தூயவைகளைத்துறந்து துப்புரவு இல்லாமல் தீயவழியில் நடகிறார்கள்.

திருமணம் மனிதனுக்கு மிகவும் முக்கியம். அவன் நடத்தையாகட்டும். அவன் செயலகட்டும். அவன் ஒழுக்கமாட்டும். அனைத்திலும் நல்லவனாகயிருந்தபோதும்  அவன் ஒரு மனிதனே! அவனுகுள் ஆசாபாசங்கள். ஆயிரம் ஆசைகள்.அத்துமீரத்துடிக்கும் எண்ணங்கள் அத்தனையும் அவனுக்குள்ளே அடக்கவா? இல்லை அப்பப்ப அடுத்தவர்களிடம் தன் அனைத்து தேவைகளையும்
 தீர்த்துக்கொள்வதா?.இது மனிதனுக்கு அழகா? மனிதகுணத்துக்கு சிறப்பா?

தன் சொல்லையும், செயலையும். நல்லதையும் கெட்டதையும். அணுஅணுவாய் ரசிக்க, அனுபவிக்க,பங்கேற்க. தனக்கென்று ஒரு சொந்தம் வேண்டும் அன்போடு பார்த்துக்கொள்ள, அனுசரணையோடு நடத்திசெல்ல, அவர்களுக்கென்று ஒருபாதை வகுத்துக்கொள்ள, அதில் நேரானமுறையில் பயணம் செய்ய. இவ்வுலக வாழ்கையிலும் மறு உலக வாழ்க்கையையும் வெற்றிக்கொள்ள. நிச்சியம் திருமணமும், அதனால் கிடைக்கும் தாம்பத்தியமும்தான் மனிதனுக்கு அவசியம் மிகமுக்கியம்.

காணும் இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமா? மனிதன்.
இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும் நான்குகால் மிருகமா? இல்லையே!

மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன அதை உணர்ந்தால் நிச்சியம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகியசெயலான திருமணத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தாம்பத்தியம் என்னும் உறவுக்குள் உல்லசமாய் உலாவருவான்.

திருமணத்தை ஒதுக்கி துறவரம்! [துறவரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூளியங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை]அல்லது தன் முன்னேற்றங்களுக்கு தடை!
அல்லது தொண்டுகளுக்கு இடையூறு. என நினைத்து திருமணத்தை வெறுப்பவன். அவன் சாதித்து என்ன? முன்னேறியென்ன? அதை திருமணம் செய்து பல இடைஞ்சலுகளுக்கு மத்தியில், சாதனைகளும் முன்னேற்றங்களும் காண்பவனே முழுமையான வெற்றியடைகிறான்.
எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கல்லும் முல்லும் குத்தாமல் ஓடும்பாதையில் யாரும் குறுக்கே வராமல் தான்மட்டும் ஓடி நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதில் என்ன இருக்கு வெற்றி. அது ஒரு வெற்றியா?

திருமணம் என்பது சுகமான சுமை, அந்த சுமையில் இருக்கும் சுகம் வேறெதிலும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை. நிச்சியம் இல்லை. கடலும் காட்டாறும் ஒன்றா? உலகில் ஓடும் அத்தனை நீரும் சங்கமம் கடலோடு என்றபோதும். காட்டாற்றில் களங்கம் கண்ட கண்ட அசிங்கங்கள் அதில் கலக்கும். கடல் அப்படியல்ல அசிங்கத்தையும் சுத்தப்படுத்தி அதையும் குடிநீராக்கி உயிர்வாழச்செய்யும் உன்னதம் மிகுந்தது.

ஆகவே ஆன்மாவே!
திருமணமென்னும் தூயதை புணைந்து தாம்பத்தியமென்னும் இனியதில்
இணைந்து. வாரிசுகளென்னும் வளமையை உருவாக்கி நன்மையின்பக்கமே நாம் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மான்[இறைவன்] வழிசெய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம்பற்றி
அறியத்தந்த இறைவன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே! -8 ஒழுக்கம்

| | 29 comments

بسم الله الرحمن الرحيم
ஒழுக்கம் [கற்பு நெறி]




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்புள்ள ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்

ஆன்மாவே!

[முஹம்மதே!] தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும்
தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
ஆண்களுக்குக் கூறுவீராக!
இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
[அல்குர் ஆன்: பாகம் 18-24.அந்நூர்]


தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட
பெண்களுக்கு கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தை வெளியே தெரிபவைதவிர மற்றவற்றை வெளிப்படுத்தவேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக்கொள்ளட்டும்.
தமது கணவர்கள். தமது தந்தையர்.தமது புதல்வர்கள்.தமது கணவரின் புதல்வர்கள்.தமது சகோதரர்களில் புதல்வர்கள்.தமது சகோதரியின் புதல்வர்கள்.. பெண்கள். தாங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில்
தள்ளாத வயதின் காரணமக பெண்கள்மீது நாட்டமில்லாத பணியாட்கள்.
பெண்களின் மறைவிடங்களை அறிந்துக்கொள்ளாத குழந்தைகள் தவிர.
மற்றவர்களிடம் தனது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்.
அவர்கள் மறைத்துவைத்திருக்கும் அலங்காரம் அறிப்படவேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்துக்கொண்டே நடக்கவேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே!
அனைவரும் அல்லாஹ்வை நோக்கியே திரும்புங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள்..


[அல்குர் ஆன்:பாகம் 18- 24.அந்நூர்]


ஒழுக்கம் என்பது மனிதனுக்கு மிக மிக முக்கியம்.
ஒழுக்கமற்று நடப்பவனை இவ்வுலகமட்டுமல்ல இறைவனும் வெறுத்து ஒதுக்குவான்.
ஒழுக்கம் என்பது வெளித்தோற்றத்துக்கல்ல உள்மனதுக்கு. மனம் ஒழுக்கத்துடன் இருந்தால்தான் மற்றது அனைத்தும் ஒழுக்கமாக இருக்கும்
ஒழுக்கம் மனதுக்குதான் உடலுக்கல்ல என்பதைப்போல். மனம்தான் ஒழுக்கமாக இருக்கிறதே. ஆதலால் உடலை மறைக்கும் ஆடையை எப்படியும் உடுத்தலாம் என்ற எண்ணம் சரியல்ல.

தனிமனித ஒழுக்கம் ஒரு தலைமுறையையே நன்நடத்தையோடு கொண்டுசெல்ல வழிவகுக்கிறது.
தனிமனித ஒழுக்கம் ஒன்று தரகுறைவாகிறதோ அன்று அவனின் வாழ்க்கையில் ஒருகரும்புள்ளி வந்துவிடுகிறது.

ஒழுக்கத்துடன் வாழ பூமியில் எத்தனையோ வழிகளிருந்தும் ஒழுக்கமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மனிதர்களை காணும்போது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒழுக்கமற்று வாழ்க்கையை தேர்ந்தெடு[ப்ப]த்தற்கு ஒரு தன்னம்பிக்கையில்லாத காரணங்களைவேறு கூறிக்கொள்கிறார்கள்.

உன் செயல் பிறரை எவ்விதத்திலும் பாதிக்கூடாது. அது நடையாகட்டும், உடையாகட்டும், சொல்லாகட்டும், செயலாகட்டும்.
உன் நல்லொழுக்கத்தைப்பார்த்து அதைபோல் பிறரும் நடக்கும்படி உன்னை நீ தயார்படுத்திக்கொள்.

ஒழுக்கம் உயிரோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. ஒழுக்கம் தவறியவன் உயிரோடிருந்தும் நடைபிணமே [ஒழுக்கம் விழுப்பம் தரலாம். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்]

மனிதன் எப்படியும் வாழலாம் என்பதல்ல! இப்படித்தான் வாழனும் என்பதுதானே
அப்படியிருக்கும் பட்சத்தில் ஒழுக்கத்தை நிச்சியம் நாம் கடைப்பிடிக்கனும்.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வோரைப்பாருங்கள் அவர்கள் எவ்விதத்திலும் நிம்மதியடையமாட்டார்கள். பிறரையும் நிம்மதியடையவிடமாட்டார்கள்.
ஒழுக்கத்தின் காலம் கடந்துவிட்டதென்றும் ஒழுக்கம் உடைகளிலில்லை என்றுசொல்லி ஒட்டுத்துணியில் உலாவருகிறது நாகரீக ஒழுக்கம்.
நவ நாகரீக மோகத்தின் உச்சானியில் நாய்வாலைப்போல் நாங்களிருப்போம் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களாக தங்களை உணரும்வரை.

காலங்கள் கடந்தபோதும், மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், நாம் தந்தையின் வயிற்றிலிருந்து வந்துவிடவில்லை என்பது உண்மைதானே!
ஆக ஒழுக்கத்துடன் வாழ்வது சிறந்தது, மேன்மையானது..

ஒழுக்கத்துடன் வாழும்பொழுது
ஒவ்வொரு நொடியும் நம்மை நாமே நேசிக்கத்தொடங்கி இந்த உலகமே நம்மை நேசிக்கும்படியாகும். அனைத்திற்ககும் மேலாக
எல்லாம் வல்ல இறைவனின் நேசத்திற்கு உடையவர்களாகிவிடுவோம்
அந்த பாக்கியத்தை அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

ஆன்மாவே!
இன்று ஒழுக்கம் [கற்பு நெறியை] பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

அன்புள்ள ஆன்மாவே! -7[”சீ” என்ற சொல்]

| | 9 comments

بسم الله الرحمن الرحيم


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று தாய் தந்தையை பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

23: என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்!
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறிவிடாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு.

24: அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காவும் தாழ்த்துவீராக!
“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுப்போல் இறைவா!
இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக! என்று கேட்பீராக!

25: உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள்
நல்லோராக இருந்தால் அவன் திருந்துவோரை மன்னிப்பவனாக இருக்கிறான்.
[அல்குர்ஆன் பாகம்:15- 17.பனூ இஸ்ராயீல்]

ஒருமனிதர் தாய் தந்தையரை அழுது கொண்டிருக்குமாறு விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்வதாக வாக்குப்பிரமாணம் அளித்திட அண்ணல் நபி[ஸல்] அவர்களிடம் வந்திருந்தார். அப்போது நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்:
தாய் தந்தையரிடம் திரும்பிச்சென்று எவ்வாறு அழச்செய்துவிட்டு வந்தாயோ
அவ்வாறு சிரிக்கச்செய்துவிட்டு வா!” என்றார்கள்.

[அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் [ரலி] ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்]

ஆன்மாவே!
இறைவன் இப்புவியை படைத்து அதில் மனிதர்களையும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். அதில் தாய் தந்தையென்ற உயரிய ஸ்தானத்தையும் கொடுத்து நம்முடைய இப்பிறப்பு இந்த இருவர்கள் மூலம்தான் இவர்களின் மூலமே இவ்வுலக வாழ்க்கையைக்காணவேண்டும் என்ற நிலையையும் வகுத்துள்ளான்.

நம்மை ஈன்றெடுக்க அவர்கள் படும் கஷ்டநஸ்டங்கள். துன்பதுயரங்கள். அதையெல்லாம் சொல்லில் விவரிக்கமுடியாது அத்தனை இன்ப துன்பங்களுக்கிடையிலும், நம்மை ஒரு பூப்போன்று பெற்றடுத்து. ஈ எறும்பு. அண்டாமல். விடிய விடிய கண்விழித்து காத்திருந்து. உழைத்து உழைத்து ஓடாகி, நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும்வரையில் அவர்களின்
கஷ்டங்களை சிறுதும் பொருட்படுத்தாமல், நமக்காவே வாழ்ந்து வரும்
தியாகத்திரு உள்ளங்கள்.

நாம் வளர்ந்து ஆளானதும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
அவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் கேட்பதற்க்கு தயாராகயில்லை,
அவர்கள் முதுமையடைந்துவிட்டால் அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிடுகிறோம். பெயருக்காக ஊர் உலகம் பேசும் என்ற ஒன்றுக்காக அவர்களை கூடவே வைத்துள்ளோம். வயது தளர்ந்தபோது அவர்களும் ஒரு குழந்தையே! என்பதைமறந்து அவர்கள் எது சொன்னாலும் குற்றமென கருதுகிறோம்.

தாயையாவது சிலர் மதிக்கிறார்கள் ஆனால் தந்தையை, வெகு மோசமாக விமர்சிக்கிறார்கள். அது ஏனென்று புரியவில்லை, சிறுவயதுமுதல் அவர்களுக்காக உயிரை உருக்கி உழைத்து கஷ்டப்படும் அவர்களை.
தரைக்குறைவாக பேசுகிறார்கள், ஆண்மக்களாலேயே பேசப்படுகிறார்கள்.
சினிமாக்களில், சீரியல்களில், அப்பனாஅவன், அவன்கிடக்கிறான் கஞ்சப்பய, [அதைக்கண்டு இவர்களும்]அது இதுவென வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். நீ தந்தையாகும்போது தெரியும்.தந்தையின் பொருப்பும்
அதன் தகுதியும்.

ஒருசில தந்தைகள் செய்யும்தவறு ஒட்டுமொத்த தந்தைகளுக்கும் இழுக்கை தேடித்தருகிறது, தாய் தவறுவதில்லையென்ற நம்பிக்கை அதே நம்பிக்கையை தந்தையின்மேலும் வைக்கவேண்டும். ஏனென்றால் இருவரில்லாமல் நாமில்லை. இருவருமே நமக்காகவே வாழும் ஜீவன்கள். சிலர் தந்தையென்ற பொருப்புக்களை மறந்து குடும்பம் என்ற பொருப்பை துறந்து தன் சுயநலன்களுக்காகவும் தன் சுகங்களுக்காவும் செயல்படுவது தவறே! அதற்கு அவர்களுக்கு இறைவனிடத்தில் கேள்வியுமுண்டு தவறுக்கான தண்டனையுமுண்டு.

ஆன்மாவே!
பிறந்ததிலிருந்து உனக்காகவே வாழும் அவர்களை இடையில்வரும் சொந்ததங்களுக்காக உதறித்தள்ளிவிடாதே! இடையில் வரும் [கணவன் மனைவி காதல் நட்பு] அனைத்தும் ஒரு கண் என்றால்,
உன் மற்றொருகண் பெற்றவர்களே! அவர்களை உதாசினப்படுத்திவிட்டு, வயதாகிவிட்டது இவர்களால் வாக்கு வாதங்கள், பிரச்சனைகள் அதான் அவர்களை விட்டு தனியே வந்தாச்சி என்ற போலிக்காரணங்களெல்லாம் கூறிக்கொண்டு அலையாதே! வயதான காலத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை

அவர்கள் உனக்கு கெடுதல் செய்தபோதும் நீ அவர்களுக்கு நன்மை செய்!
ஏனென்றால் அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தவர்கள். இத்தனை வருடங்கள் உனக்காகவே வாழ்ந்தவர்களால் இடையில் பாசம் பங்குபோடுவதை தாங்கயிழாமல், வரும் இயலாமையே! வாக்குவாதங்கள் அதைபுரிந்து நடந்துக்கொள்.. நீ இவ்வுலகத்தைப் பார்க்க உயிரும் உடலும் தந்தவர்கள்.
காலம் மிகமிகக் குறுகியது. இன்றைய பொழுது நாளை உனக்காகவும் திரும்பும் அப்போது நீ எதைச்செய்தாயோ அதையே நீயும் காண்பாய்.
இன்று அவர்கள் உன்னால்!
நாளை நீ உன் மக்களால்!

இன்று தூவப்படும் விதை, நாளை வேராக. அல்லது இன்றே மரமாக!

இறைவனுக்கு
அடுத்தபடியாக வணக்கத்திற்குறியவர்கள் பெற்றோர்களே!
வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமென்பதால், அந்த ஸ்தானத்தில் பெற்றோர்களை நாம் மதிக்கவேண்டும்.

அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும். முதுமையடைந்துவிட்டால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடாமல்.தனிமைப்படுத்திவிடாமல், கண்ணும் கருத்துமாக, மனம் நோகாதபடி நாமே பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
நாம் முன்போ அவர்கள் முன்போ.
நம்மால் நம் உயிர் இருக்கும்வரை அவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவும், மனகஷ்டமும் தராமல், பேணிக்காத்திடுவோம்
இறைவன் நம் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!

ஆன்மாவே!

இன்று தாய் தந்தையை பேணிக்காப்பதுப்பற்றி
அறியத்தந்த இறைவன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் பொறாமையென்னும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு
விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்...

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..