.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

இறையடியார்களே! உங்களைத்தான்..

| |

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும்.
 அனைவர்மீதும் இறைவனின் அருள் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்தும். அனைத்தும் இறைவனை நினைத்து அன்புடனும். அச்சத்துடனும் வணங்கும். இதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால்  மனிதர்கள் மட்டுமே. அதை பொழுதுபோக்கிற்காக பொடுபோக்குதனமாக வெரும் கடமைக்காக செய்வது.அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்..

சில பொடுபோக்கு தொழுகையாளர்களை  பார்த்ததால் மனம் நொந்தது அதனால் இதை எழுதும்படியானது.

இறைவனை வணங்கவேண்டும் இது கட்டாயக்கடமை. எப்படி? அது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த விசயம். அறியாதவர்களும் உண்டு. ஆனால் அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யும்போது மனம் ரணப்படுகிறது.

இறைவனை நினைத்து தொழுகைக்கு தயாரகும் ஒருவர் முதலில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒழுவின் மூலம்.
ஒழுவை [சில இடங்களில் உளு என்பார்கள்] சரியாக முடிக்கவேண்டும் ஒழு என்றால் இருகைகள் கழுவுதல்.  நாசிக்கு  நீர்விடுதல்.முகம் கழுவுதல். முட்டுக்கைகள்வரை கழுவுதல்.தலையை தண்ணீரால் தடவுதல். காதுகளையும் தண்ணீர்கொண்டு தடவுதல். இருகாள்களையும் கழுவுதல்.இது ஒழு செய்யும் முறை. இதுசெய்யும்போதும் செய்தபின்னும் இறைவன் சொன்னதுபோல்  இருக்கவேண்டும்.

விரல்களில் நெயில்பாலிஸ் போட்டிருத்தல் அதன் தடிமன் தனம் ஒழுச்செய்யும்போது தண்ணீர் சேரவேண்டிய இடத்துக்கு சேராது அதனால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் சிலர் ஒழுசெய்துவிட்டு துணிகொண்டு நன்றாக துடைத்துவிட்டு பவுடர்பூசி மேக்கப்போட்டு. உதட்டுச்சாயம் அதுவும் திருமணவிழாவிற்கு செல்வதுபோல் இட்டுக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு[சுர்மா அல்ல] மஸ்காரா ஐபிரோ செய்துகொண்டு தராவீஹ் தொழுகைக்கு வருகிறார்கள் இது தொழுகைக்கு கூடுமா?

பெண்கள் அலங்காரம்  செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக  பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு  தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.

அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு.  குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை.

ரிங்டோனில் ஒலிக்கும் பாட்டின் சப்தம் பிறர் தொழும்போது அவர்களுக்கு எந்தளவு கவனத்தை சிதறடிக்கும் என்பதை யாரும் நினைத்துப்பார்பதில்லை. இறைவனைத் தொழும் இடம் என்றால் எவ்வளவு பயபக்தியிருக்கவேண்டும். அல்லது சிறு அச்சமாவது இருக்கவேண்டாமா?
இறைவனுக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளில் தொழுகை மிக மிக முக்கியமானது அதை பேணுதலுடல் தொழுவதே சாலச்சிறந்தது.
இறையடியார்களான நாம் அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது
இறைவனுக்கும். நமக்கும். எவ்வித தடையுமில்லாது அவனிடம் நாம் நம்மை  நிறைவான முறையில்  ஒப்படைக்கவேண்டாமா?
 இந்த நோன்புக்கு இருக்கும் நாம் அடுத்த நோன்புவரை ஏன் அடுத்த நாள்வரை இருப்போமா என்பது நமக்குத்தெரியுமா?
அனைத்தும் அறிந்துகொண்டே பிழைசெய்வது சரியா?

நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?

அழகு சாதனங்களில் தொழுகைக்கு, ஒழுவுக்கு கூடாதவைகள் கலக்கப்படிருக்கா என நாம் அறியோம். சில சொல்கிறார்கள் இது ஹலாலாக செய்யப்பட்ட லிஃப்ஸ்டிக் அதனால் தடவுகிறோம் என. இருந்துவிட்டுபோகட்டும். அதையேன் இறைவனின் சன்னிதானத்தில்
அழுது தொழும் அந்நேரத்தில் இட்டுவரவேண்டும் அங்கே பயபக்தியிருக்குமா? பொடுபோக்குதனம் இருக்குமா? அல்லது இறைவனின் மீது சிறு அச்சம்தானிருக்குமா?

இறைவனின்முன் ஓர் அச்சமின்றி நாளை அவன்வசம் மீழ்வோம் என பயமின்றி நடப்பதுதான் அதுவும் அனைத்தும் அறிந்தவர்கள் நடப்பதுதான் வேதனையான விசயம்..

இதை அவரவர் வீட்டு ஆண்களும் தன் அறியாப்பெண்களுக்கு நிச்சயம் சொல்லித்தரவேண்டும். அன்புப் பெண்களும் இதையறிந்து இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும் நாளை நிச்சயம் கேள்விக்கேட்கப்படுவோம்.
அதற்கான கூலியை அடையப்பெறுவோம் .
அதனால் நல்லவற்றை கேட்டும். பார்த்தும். படித்தும்.
அறிந்துகொள்ளுங்கள்.
அப்படியில்லையாயின் நாளை நஷ்டவாளர்களில் நாமும் ஒருவராகிவிடுவோம். அப்படியொரு நிலை வராமல் நம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து நம்மை சுவர்கவாசிகளாக ஆக்குவானாக ஆமீன்...

எவர் ஒருவர் தொழுகையை பேணி அதன் பர்ளுகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் இறைவனின் நேசத்திற்க்குறியவர்கள்

எவர் ஒருவர் தொழுகையில் அலச்சியமுடனும் பிறர் பார்க்கிறார்கள் என்பதர்காகவும் தொழுகிறார்களோ அவர்கள் அவனின் வெருப்புக்குள்ளானவர்கள்.

நான் அனைத்தும் அறிந்தவளல்ல. அறிந்தவரை இதுதவறென்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இறைவனின்மேல் நேசம் வைத்ததால்
இதை என்மன வருத்துடன் எழுதுகிறேன்
பிறரின் மனம் வருந்துவதற்க்காக அல்ல
அப்படி என் எழுத்துக்களில் வருந்துபடியாக இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

12 comments:

amina said...

nalla pathivu ippadi thiriyum makkalukku keeduthaan..

Unknown said...

// எவர் ஒருவர் தொழுகையைப்
பேணி அதன் பர்ளுகளை
நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்
இறைவனின் நேசத்திற்குரியவர்கள். //

இந்த பாக்கியம் நம் அனைவருக்கும்
கிடைக்க வல்ல அல்லாஹ் துணை
இருப்பானாக.

தொழுகையையும் அதன் சிறப்பையும்
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

சுபுகானி புகாரி said...

நிறைய இடங்களில் இப்படித்தான் நடக்கிறது இறைவனின் பயம் யாருக்கும் இருப்பத்திலை.
இவ்வுல வாழ்க்கைமட்டுமே நிரந்தரமென நினைத்து வாழ்கிறார்கள் இறௌஇவந்தான் இவர்களை காக்க வேண்டும்.

மன்சூர் said...

மிக தெளிவாக எழுதியிருக்கீங்க மலிக்கா.
இதை சம்மந்தபட்டவர்கள் உணர்வார்களா வேதனையான விசயம், அல்லாஹ் காப்பாற்றட்டும்

aysha abul said...

சலாம் மலிக்கா,
நடக்கும் தவறுகளை தாங்கள் தெளிவாக
விளக்கி உள்ளீர்கள்.

Jaleela Kamal said...

நீங்கள் சொல்வது கேட்டு மனசு ரொம்ப கழ்டமாவே இருக்கு, நானும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.
இங்கு தினம் தொழுகைக்கு முன்பு போகும் போது இப்படி கண்டுள்ளேன்.
கடந்த முன்று வருடமாக வேறு இடத்தில் தான் தொழுகிறேன்., அங்கு தொழுகை மட்டுமே பேச்சுக்கு இடம் இல்லை.
இன்னும் தொழும் இடத்தில் சாமிக்கு அணியும் நகை போல் வேறு அணிந்து வருகிறார்கள். இது என் மனதை மிகவும் பாதித்த விஷியம், அல்லாவே எல்லோருக்கும் தொழுகையில் பொடு போக்கு தனம் இல்ல்லாமல் இறை அச்சத்துடன் தொழ கிருபை செய்வானாக,

ஜெய்லானி said...

இதில் பல விஷயங்கள் மறுக்கமுடியாத உண்மை......(( அல்லாஹ்தான் நல்ல புத்தியை குடுக்கனும் )) நல்ல நேரத்தில் அவசியமான பதிவு...!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

மலிக்கா.. அருமையா சொல்லிருக்கீங்க.. இப்படித்தான் நிறைய பேர் இருக்காங்க...

கிளியனூர் இஸ்மத் said...

தொழுகையில் இப்படி பொடுபோக்கிதனமாக இருப்பதற்கு காரணம் என்ன?

நம் பிடறி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கும் இறைவனைப்பற்றிய அறியாமை....!
அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் அதில் கட்டப்படும் கட்டிடம் தரமானதாக வழுவானதாக இருக்கும்...உங்கள் பதிவு அவசியமானது...நன்றி

காஞ்சி முரளி said...

தங்களுக்கும்...
தங்கள் மச்சான்... குழந்தைகள்... மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....

******************************************************
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"!
*******************************************************

அதோடு...
ஜெய்லானி மற்றும் அவர்தம் குடும்பத்தார்...
மற்றும்
அனைத்து இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும்
இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!


அனைவருக்கும்
என் இனிய நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

புல்லாங்குழல் said...

சிறப்பான பதிவு!தொழுகை தன்னை ஞாபகம் செய்வதற்காக(அஸ்ஸலாத்து லி திக்ரி)என சொல்லுகின்றான் இறைவன்.அறிமுகம் இல்லாத எதையும் நாம் ஞாபகம் செய்ய முடியாது.மன ஓர்மையுடன் இறைவனை முன்னோக்கும் அளவு அவனது நெருக்கத்தை அறிந்து கொளவது நம் மீது கடமை.அவனை அறிந்து,முன்னோக்கி,பணிந்து வாழும் பாக்கியத்தை நமக்கு இறைவன் அருள இறைஞ்சுகின்றேன்.வஸ்ஸலாம்.

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ்,

ஜஸாக்குமுல்லாஹி கைரான் ஃபித் துன்யா வல் ஆகிரா மலிகாக்கா. இன்னும் அழகாய் பாயிண்ட் பை பாயிண்ட்டா போட்டிருந்தீங்கன்ன, பிரிண்ட் எடுத்து மஸ்ஜிதுகள்ல ஒட்ட சொல்லியிருக்கலாம். உண்மைலயே தேவையான பதிவு. அல்லாஹ் இதை நல் அமல்களில் கபூல் செய்து ஒப்பற்ற கூலியை தருவானாக. ஆமீன்.

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..